Sunday 18 October 2020

ஞானம்

🍁ஓஷோ ஞானக் கதைகள்🍁 

🌸 நான் உனக்கு ஒரு கதையைச் சொல்கிறேன்... 

புத்தர் இந்தக் கதையை அநேக தடவை கூறியுள்ளார்.

🌸 புத்தர் ஒரு காட்டைக் கடந்து சென்று கொண்டிருந்தார்...

அப்போது ஒரு மனிதன் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தான்...

யாரோ வேட்டையாடுபவர்களின் அம்பானது அவனது உடலில் பாய்ந்திருந்தது.

அவன் உயிருக்குப் போராடுகிறான். 

அவன் ஒரு தத்துவவாதி. 

🌸 புத்தர் அவனிடம்,

"இந்த அம்பை உனது உடலில் இருந்து எடுத்துவிட முடியும்.

அதை எடுப்பதற்கு என்னை அனுமதி" என்று கேட்டார்...

அந்த மனிதன்,

"கூடாது, தயவுசெய்து இதற்குக் காரணம் யார் என்று முதலில் எனக்கு தயவு செய்து கூறுங்கள்? 

🌸 எனது விரோதி யார்? 
இந்த அம்பு ஏன் எனது உடலைத் துளைத்தது? 
என்ன கர்மத்தின் பலன் இது? 

இந்த அம்பில் விஷம் தடவப்பட்டுள்ளதா அல்லது இல்லையா என்று கூறுங்கள்"என்று கேட்டான்.

🌸 அதைக்கேட்ட புத்தர்,

"விசாரணையை, 
நீ பின்னர் வைத்துக் கொள்ளலாம். ஆனால் முதலில் இந்த அம்பை வெளியே எடுக்க விடு.

ஏனெனில், நீ இப்போது சாவின் விளிம்பில் இருக்கிறாய். 

🌸 முதலில் 
இந்த விசாரணைகள் எல்லாம் செய்யப்பட்ட பிறகுதான் 

இந்த அம்பு வெளியே எடுக்கப்பட வேண்டும் என்றால்,

நீ உயிர்பிழைக்கப் போவதில்லை." என்று 
பதில் கூறினார்.

🌸 இந்தக் கதையை புத்தர் நிறைய தடவை கூறியுள்ளார். 

இதன் மூலம் அவர் கூறுவது என்ன?

"நாம் அனைவரும் சாவின் விளிம்பில்தான் இருக்கிறோம் என்று அர்த்தம்." 

மரணத்தின் அம்பு உன்னை ஏற்கனவே துளைத்து விட்டது.

 நீ அதை அறிந்திருக்கலாம். அல்லது அறியாமல் இருக்கலாம். 

🌸 மரணத்தின் அம்பு ஏற்கனவே உன்னுள் 
ஊடுருவி விட்டது.

அம்பு கண்களுக்குத் தெரியாமல் இருக்கலாம்.

ஆனால் கஷ்டம் இருக்கும். 
நீ படும் துன்பம்,

"மரணத்தின் அம்பு 
உனக்குள் ஊடுருவிச் சென்று விட்டதாகக் காட்டுகிறது."

🌸 எனவே, 

"இந்த உலகைப் படைத்தது யார்? 

ஏன் படைத்தான்? 

நான் ஏன் படைக்கப்பட்டேன்? 

எனக்குப் பல பிறவிகள் உண்டா? அல்லது 
ஒரு பிறவிதானா?

நான் இறந்த பிறகு உயிரோடு இருப்பேனா அல்லது இல்லையா?" 

என்று கேள்விகளை கேட்டுக் கொண்டிருக்காதே.

🌸 அதனால்தான் புத்தர், 

"பிறகு விசாரணை செய்து கொள். 

முதலில் துன்பம் என்னும் இந்த அம்பு வெளியே எடுக்கப்படட்டும்"
என்று கூறுகிறார்.

🌸 மேலும் புத்தர் சிரித்துக் கொண்டே, 

" துன்பம் என்னும்,
இந்த அம்பு வெளியே எடுக்கப்பட்ட பிறகு,

இதைப் போன்று விசாரணை செய்கின்ற யாரையும்,

நான் ஒருபோதும் கண்டதில்லை." 
என்று கூறினார்.

🌿ஓஷோ🌿