Thursday 20 September 2018

வெற்றி

THING DIFFERENT WAY FOR SUCCESS!

*தொழில் ரகசியம்: வித்தியாசமாயிருந்தால் வெற்றி பெறலாம்*!

வீட்டிலிருந்து அவசரமாக கிளம் பிக் கொண்டிருக்கிறீர்கள். மனைவி நிறுத்தி, ‘ஏங்க, ஒரு விஷயம்’ என்கிறாள். ‘இருபது வருஷம் சொல்லாததை இப்ப சொல்ல வந்துட்டியா, டைம் ஆகுது’ என்று நகர்கிறீர்கள். வழியில் நண்பன் நிறுத்துகிறான். ‘மாப்ளே நாளைக்கு’ என்பவனை ‘அத நாளைக்கு பேசுவோம், அவசரம்டா’ என்று ஓடுகிறீர்கள். எல்லா சிக்னலும் பச்சையாக இருக்கக்கூடாதா என்று பரபரக்கும் கார் பயணம். அப்பொழுது அதைப் பார்க்கிறீர்கள். படாரென்று பிரேக் போடுகிறீர்கள். இறங்கிப் போய் பார்க்கத் தூண்டும் காட்சி.

ஊதா கலரில் ஒரு மாடு நிற்கிறது!

அட, என்ன ஆச்சரியம். இந்தக் கலரில் கூட மாடு இருக்குமா? ஊதா கலரு ரிப்பன் ஓகே. ஊதா கலரு மாடா? இதன் பால் என்ன கலர் இருக்கும்? சர்கஸ் மாடா? மேக் அப் போட்டிருக்காங்களா?

மனைவி நிறுத்த முடியாத அவசரத்தை, பால்ய நண்பன் தடுக்க முடியாத உங்கள் ஓட்டத்தை நாலு கால் ஜீவன் நிறுத்திவிட்டது.

*அதுவே ஒரு வெள்ளை மாடென்றால் நின்றிருப்பீர்களா*?

வித்தியாசம்தான் ஈர்க்கும்

வித்தியாசமாய் தெரிந்ததால் நின்றீர்கள். சாதா மாடா அது, ஊதா மாடாச்சே! பார்த்திராத ஆச்சரியம் என்பதால் பரவசம். இதுதான் மனித இயல்பு. வித்தியாசமாய் இருந்தால், வேலை வெட்டியை விட்டு விட்டு, வலிய போய், வெட்கம் இல்லாமல், வாய் பிளந்து வக்கணையாய் பார்க்கும் மனித வர்க்கத்தின் விகல்பமில்லாத இயல்பு.

இப்படி இருந்தும், இது தெரிந்தும் கடையை, வியாபா ரத்தை, பிராண்டை வித்தியாசமாய் காட்டாமல் பத்தோடு பதினொன்றாகத்தான் பலர் காட்டுகிறார்கள். செய்வதையும் செய்து விட்டு ‘மத்த கடை மாதிரி என் கடை இருந்தும் வியாபாரம் ஆக மாட்டேங்குது’ என்று புலம்புகிறார்கள்.

‘ *மத்த பிராண்ட் போல என் பிராண்ட் தரமானதா இருந்தும் விக்கமாட்டேங்குது*’ என்று அழுகிறார்கள். ‘பிறர் மாதிரியே பிசினஸ் பண்ணியும்  என் பிசினஸ் சரியா போகல’ என்று அங்கலாய்க்கிறார்கள்.

தனித்துவம் தேவை

செய்யும் பிசினஸை வித்தியாசப்படுத்துங்கள்; விற்கும் பிராண்டை தனித்துவமாய் மிளிர வையுங்கள்; அப்படிச் செய்தால் மட்டுமே உங்கள் தொழில் தழைக்கும் என்கிறார் ‘செத் காடின்’. Purple Cow (ஊதா மாடு) பிராண்டை வித்தியாசப்படுத்தும் முறை மட்டுமல்ல, இவர் எழுதியிருக்கும் புத்தகத்தின் தலைப்பும் கூட.

சாதாரணமாக மார்க்கெட்டிங் செய்யும் தொழிலதிபர்கள் வெள்ளை மாடுகள். பத்தோடு ஒன்றாக நிற்கும் ஆட்டு மந்தைக் கூட்டத்தைச் சேர்ந்தவர்கள். பிராண்டையும் பிசினஸையும் வித்தியாசப்படுத்தி விற்கும் தொழிலதிபர்களே ஊதா கலர் மாடுகள். என்ன கூட்டத்திலும் தனியாய் தெரிவார்கள். அழகாய் மிளிர்வார்கள்.

*வெற்றி பெற்ற நிறுவனங்கள்*

ஓவென்று ஒப்பாரி வைக்கத் தான் டீவி சீரியல்கள் என்றிருந்த காலத்தில் போட்டி நிகழ்ச்சிகள், ரியாலிடி ஷோக்கள் மூலம் தன்னை வித்தியாசப்படுத்திக் காட் டிய ’ *விஜய் டீவி*’ ஒரு ஊதா மாடு.

கெமிக்கல்ஸ் கொண்டு மட்டுமே தயாரிக்கப்பட்டு வந்த ஷாம்புக்கள் மத்தியில் சீயக்காய் பேஸ்ட் வடிவில் வந்த ஹெர்பல் ஷாம்பு ’மீரா’ ஒரு ஊதா மாடு.

பெண்களை சிவப்பாக்குகிறேன் என்று எல்லா கிரீம்களும் கூறியபோது ஆண்கள் என்ன பாவம் செய்தார்கள் என்று அவர்களுக்கான பிரத்யேக கிரீமாக வந்த ‘ஃபேர் அண்ட் ஹேண்ட்சம்’ ஒரு ஊதா மாடு.

*சாதா மாடுகளுக்கிடையே சூடாய், சூப்பராய் வெற்றி பெற்ற இந்த ஊதா மாடுகளின் ரகசியம் வெரி சிம்பிள்*. இவை மற்ற பிராண்டுகள் போலில்லாமல் வித்தியாசமாய் தெரிந்தன. மற்றவர் சொன்னதையே சொல்லாமல் தனித்துவமாய் நின்றன.

*வெற்றி சாத்தியமாகாது*

பிராண்டுகளை வித்தியாசப் படுத்திக் காட்டாமல் போனால் காணாமல் போகவேண்டும். வித்தியாசமில்லாத வெள்ளை மாடுகளைப் போன்ற பிராண்டுகள் விளம்பரத்திற்கு எத்தனை கோடி செலவழித்தாலும் அவை வித்தி யாசமாய் தெரியப்போவதில்லை. வித்தியாசமாய் இல்லாத எதையுமே ஒரு முறை பார்க்கவே போரடிக்குமே.

ஆனால் *ஊதா கலர் மாட்டிற்கு விளம்பரம் தேவையில்லை*. புரமோஷன் அவசியமில்லை. வாடிக்கையாளர்களே வந்து க்யூ கட்டி நிற்பார்கள். வைத்த கண் வாங்காமல் பார்ப்பார்கள். வாய் பொத்தி வாங்குவார்கள்!

இது இப்படி இருந்தும் நூற்றுக்கு தொண்ணூறு மார்க் கெட்டர்கள் சாதா மாடுகளை கட்டிக்கொண்டு தான் அழுவேன் என்று அடம் பிடிக்கிறார்கள். வெற்றி பெற்ற பிராண்டுகள் போலவே தன் பிராண்டும் இருந்தால் போதும், தானும் வெற்றி பெற்று விடலாம் என்று நினைக்கிறார்கள். மற்ற பிராண்டுகளைப் போலவே தங்கள் பிராண்டை செய்து விற்கிறார்கள். மற்றவர் கடையைப் போலவே தங்கள் கடையை வடிவமைத்துத் திறக்கிறார்கள். அடுத்தவர் பிசினஸ் போல் தங்கள் பிசினஸை அமைக்கிறார்கள். எதுவும் சரியாய் போகாத போது மற்றவர் போலவே ஓவென்று ஒப்பாரி வைக்கிறார்கள்.

*ஏன் வாங்க வேண்டும்*

வெற்றி பெற்ற பிராண்டைப் போலவே உங்கள் பிராண்டும் இருந்தால் வாடிக்கையாளர் உங்கள் பிராண்டை எதற்கு வாங்கவேண்டும்? வெற்றி பெற்ற பிராண்டையே வாங்கலாமே. இது ஏனோ பலருக்குத் தெரிவதில்லை. சொன்னாலும் புரிவதில்லை.

‘ *சரவணா ஸ்டோர்ஸ்* ’ குறைந்த விலை என்று தன்னை வித்தியாசப்படுத்தி வெற்றிப் பெற்றிருக்கிறது. நாமும் குறைந்த விலையில் விற்றால் வெற்றி என்று நினைத்து குறைந்த விலை என்று கூறித் திறந்த பல கடைகள் மூடப்பட்டுவிட்டன. குறைந்த விலை என்று எந்த கடை கூறினாலும் வாடிக்கையாளருக்கு சரவணா ஸ்டோர்ஸ் தானே நினைவிற்கு வரும்? பிறகு எத்தனை கோடி செலவழித்து விளம்பரப்படுத்தி என்ன பயன்? சரவணா ஸ்டோர்ஸுக்குத் தானே உங்கள் விளம்பரம் உதவும்? ‘ஐயா, எங்களுக்கு விளம்பர தர்மம் பண்ணுங்கய்யா என்று’ அவர்கள் கேட்டார்களா?

*பயம்தான் காரணம்*

*வித்தியாசம் காட்டாமல் மார்க்கெட்டிங் செய்வதற்கு காரணம் பலருக்குள் இருக்கும் பயம்*. ஊரோடு ஒத்து வாழ் என்று சொல்லிக் கொடுத்தே பழக்கப்பட்டுவிட்டோம். வித்தியாசமாய் செய்வது தப்பு என்றே பலர் நினைக்கிறார்கள். தனியாய் தெரிவது திமிர்தனம் என்றே முடிவு கட்டிவிட்டார்கள். தனித்துவமாய் தெரிந்தால் கண்ணடிபடும் என்று பயப்படு கிறார்கள்.

விதி விட்ட வழி என்றாவது பிசினஸ் செய்வார்களே ஒழிய வித்தியாசம் காட்டிய வழி என்று புதிய பாதைகளில் பயணிக்கமாட்டார்கள். ஊதா மாடு ரிஸ்க், சாதா மாடு தான் பெஸ்ட் என்று பழையதை, எல்லாரும் செய்ததையே செய்யப் பழகிவிட்டார்கள்.

*நீங்களும் சாதா மாடு கூட்டத்தில் சேர்ந்து தொலைக்காதீர்கள்*. உங்கள் பிராண்டை தனியாய் தெரியவைக்க என்ன தேவை என்று யோசியுங்கள். உங்கள் கடையை தனித்துவமாய் மிளிர வைக்க என்ன வழி என்று சிந்தியுங்கள். உங்கள் பிசினஸ் வித்தியாசமாய் விளங்க வைக்கும் வேலையை முடுக்கிவிடுங்கள். ஒன்றைப் புரிந்துகொள்ளுங்கள். சாதா மாடு நல்லா முட்டும். ஊதா மாடே கல்லா கட்டும்!

*பாட்டிலில் விற்ற ஷாம்பு சாதா மாடு*. சாஷேவில் வந்த ‘சிக் ஷாம்பு’ ஊதா மாடு. தமிழ் சினிமா என்றால் ஹீரோயிசம் என்பது சாதா மாடு. அப்படியில்லாமல் வெளிவந்த ‘சூது கவ்வும்’ ஊதா மாடு. பிராண்டை, கடையை, தொழிலை இனிமேலும் வித்தியாசம் காட்டாமல் சாதா மாடாய் வைத்து கறக்காதீர்கள். எதுவும் கிடைக்காது.

👑 *தனித்திருந்தால் வெற்றி*💐

*அனைவரும் செல்லும் பாதையில் சென்றால் அனைவரும் சென்ற இடத்திற்குத் தான் சென்று சேர முடியும். அங்கு கூட்டம் மோதும். ஆட்டு மந்தைப் போல் அனைவரும் ஒரே பாதையில் சென்றால் கூட்டம் இருக்காதா. புதிய பாதையைத் தேடிப் பிடித்து பயணித்தால் தான் புதிய இடங்களைப் பார்க்கமுடியும். புதிய நாடுகளைக் கண்டுபிடிக்க முடியும். புதிய வெற்றிகளைப் பெற முடியும்*.

நாற்பது

😊👍😊👍😊👍

*உடம்பின் நடுப்பகுதி வயிறு.*

*அதுபோல வாழ்க்கையின் நடுப்பகுதி நாற்பது.*

*இந்த நாற்பதாவது வயது ஆரம்பத்தில்,*
*நீங்கள் எப்படி இருப்பீர்களோ,* *அப்படித்தான் இறுதி வரையில் இருப்பீர்கள்.*

😊
*தொந்தி கனக்க விடாதீர்கள்.*
*தொந்தரவு வரும்.*
*மனம் கனக்க* *விடாதீர்கள்*
*மரணம் வரும்.*

😊
*ஒரு மனிதன்*
*வியாதியுடன்* *வாழப்போகிறானா,*
*வீரியமுடன் வாழப்போகிறானா,*
*நெஞ்ச நிறைவோடு வாழப்போகிறானா* *என்பதைத் தீர்மானிக்கும்* *வயதுதான்*
*இந்த நாற்பது.*

😊
*நிறைய வேலை செய்வதால்*
*நமக்கு நிம்மதி போவதில்லை.*
*உடம்பு உருக்குலைவதில்லை.*

😊
*என்ன நடக்குமோ என்ற*
*பயமும் கவலையும்தான்*
*மனிதன்மீது பாரமாக இறங்கி*
*அவனை நொறுக்கிவிடுகின்றன.*

😊
*பரபரப்பின்றிச் செயல்படுங்கள்.*
*கோபப்படாமல் காரியமாற்றுங்கள்.*
*நிதானத்தைக் கடைபிடியுங்கள்.*
*ஆரவாரம் வேண்டாம்.*
*அலட்டிக் கொள்ளாதீர்கள்.*
*பொறுப்புக்களை*
*சீராக நிறைவேற்றுங்கள்.*

😊
*அவசியமற்ற சுமைகளைப் போட்டுக் கொள்ளாதீர்கள்.*
*அடிக்கடி ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள்.*

😊
*தினசரி* *மத்தியானம்*
*ஒரு அரைமணி நேரம் தூங்குங்கள்.*
*இரவு பன்னிரண்டு மணிக்குமேல்*
*எக்காரணத்தை முன்னிட்டும்*
*விழித்திருக்காதீர்கள்.*

😊
*பத்துமணிக்கே படுத்துவிடுவது உத்தமம்.*
*அதிகாலையில் எழுந்து கொள்ளுங்கள்.*

😊
*ஆண்டவனை நினையுங்கள்.*
*இன்று முழுக்க என்னுடன் இருந்து என்னை ஆண்டுகொள் அப்பா.*
*நான் தப்பு பண்ண விடாதே அப்பா."*
*என்று வேண்டிக் கொள்ளுங்கள்.*

😊
*முகத்தை மலர்ச்சியுடன் வைத்துக் கொள்ளுங்கள்.*
*கடுகடுப்பும் சிடுசிடுப்பும் வேண்டாம்.*

😊
*டென்ஷன் இல்லாமல் இருங்கள்.*
*பென்ஷன் வாங்கலாம்.*

😊
*ஸ்ட்ரஸ் உண்டாக்கிக் கொண்டால்,*
*அட்ரஸ் இல்லாமல் போய்விடுவீர்கள்.*

😊
*அதனால்தான் சொல்லுகிறேன்.*
*கவலையைக் *கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளுங்கள் என்று !*

Wednesday 19 September 2018

காந்தம்

நீங்கள் ஒரு காந்தம்!

உண்மையில் ஒவ்வொரு மனிதனும் ஒரு காந்தம். எப்படி காந்தம் பல பொருட்கள் சுற்றி இருந்தாலும் இரும்புத் துண்டுகளை மட்டுமே கவர்ந்திழுக்குமோ மனிதனும் தனக்குத் தக்க மனிதர்களையும், சூழ்நிலைகளையும் மட்டுமே தன் வாழ்க்கையில் கவர்ந்திழுக்கிறான். காந்தத்திற்கும் ஒரு படி மேலே போய் அவன் தன் காந்த சக்தியைத் தானே தீர்மானம் செய்கின்ற சக்தி பெற்றிருக்கிறான். அவன் தன் காந்தசக்தியின் தன்மையை தீர்மானிக்கும் முக்கியமான விதங்கள் மூன்று.

முதலாவது, கர்மா-

மனிதன் முன்பு விதைத்ததை அறுவடை செய்யத் தேவையான மனிதர்கள் அவனால் ஈர்க்கப்படுகிறார்கள். அதற்கான சூழ்நிலைகள், நிகழ்ச்சிகள் எல்லாம் தானாக அவனைத் தானாக வந்தமைகின்றன.

இரண்டாவது,

ஆழ்மன நம்பிக்கைகள்-உலகில் நல்ல விஷயங்களில் ஆழமான நம்பிக்கைகள் கொண்டிருப்பவர்கள் நல்ல மனிதர்களையும் நல்ல விஷயங்களையும் தங்கள் வாழ்வில் தங்களை அறியாமல் வரவழைத்துக் காண்கிறார்கள்.

மூன்றாவது அதீத ஆர்வம்-

ஒரு மனிதன் எதில் எல்லாம் அதீத ஆர்வம் காட்டுகிறானோ அதுகுறித்து மேலும் ஞானமும், அனுபவங்களும் தரக் கூடிய மனிதர்களையும், சந்தர்ப்பங்களையும் காந்தமாக ஈர்த்துக் கொள்கிறான்.

ஆன்மீக ஆர்வம் அதிகமாக இருந்த விவேகானந்தரை ராமகிருஷ்ண பரம்ஹம்சரிடம் அழைத்துச் சென்றது அந்த காந்த சக்தியே. அதே போல் ஆன்மீகம் என்ற பெயரில் சித்து வித்தைகளில் அதிக ஆர்வம் காட்டுபவர்களைப் போலிச் சாமியார்களை சந்திக்க வைப்பதும் அந்தக் காந்த சக்தியே.

அவரவர் ஆர்வம் காட்டும் விஷயங்களில் ஆர்வத்தின் தரத்தைப் பொறுத்தே அவன் அனுபவங்களை விருத்தி செய்யக்கூடியவை அவனை வந்து சேருகின்றன.

ரமண மகரிஷி தானாகப் போய் ஆன்மிகப் பிரசாரம் செய்ததில்லை. சிஷ்யகோடிகளைச் சேர்த்ததில்லை. திருவண்ணாமலையை அடைந்த பிறகு அந்த ஊரை விட்டு வெளியே எங்கும் சென்றதில்லை. பல நாட்கள் தொடர்ந்து மௌனமாகவே இருந்திருக்கிறார். ஆனாலும் அவரது ஆன்மீக காந்த சக்தி இந்தியாவில் இருந்தும் வெளி நாடுகளில் இருந்தும் பல ஆன்மீகவாதிகளை அவரிடம் வரவழைத்த அதிசயத்தைக் கண்டிருக்கிறோம்.

தற்போது நம்மிடம் உள்ளதும், இது வரை வந்ததும் நாம் காந்தமாகக் கவர்ந்தவையே. பிற காந்தங்களால் நாம் கவரப்படுவதும் இந்த விதிகளின் படியே. பிரபஞ்சம் இந்த மூன்றின்படியே எல்லாவற்றையும் நமக்கு வினியோகித்திருக்கிறது.

இந்தப் பேருண்மை நம்மை ஒரு விதத்தில் ஆசுவாசப்படுத்துகிறது. வாழ்க்கையில் பலவற்றைத் தேர்ந்தெடுப்பதில் நமக்குள்ள சுதந்திரத்தை இது கோடிட்டுக் காட்டுகிறது.

  ஆழ்மன நம்பிக்கைகள். நோய்க்கிருமிகளின் சக்தி மேல் பலமான நம்பிக்கை வைத்திருப்பவன் சீக்கிரமே நோய்வாய்ப்படுகிறான். தன் உடலின் எதிர்ப்பு சக்தி மீது நம்பிக்கை வைத்திருப்பவன் சீக்கிரமாக நோய்வாய்ப்படுவதில்லை. அப்படியே நோய் வந்தாலும் வந்த வேகத்தில் அது போயும் விடுகிறது என்று இன்றைய மருத்துவம் கண்டுபிடித்து இருக்கிறது.

ஆழ்மனதில் முன்பே வைத்திருக்கும் தவறான நம்பிக்கைகளை உடனடியாக மாற்றிக் கொள்வது சிறிது கஷ்டமே என்றாலும் அது முடியாததில்லை. நாம் எதை பலமாக நம்புகிறோம், எதை எதிர்பார்க்கிறோம் என்பதைப் பட்டியலிட்டு அதில் தேவையற்றவற்றையும், தவறானவற்றையும் நீக்கிக் கொள்ளுதல் நலம்.

ஆர்வம் நம் கட்டுப்பாட்டில் தான் உள்ளது. உயர்ந்த விஷயங்களில் ஆர்வம் காட்டும் போது நல்ல எண்ண அலைகளை நாம் ஏற்படுத்துகிறோம். அவை பலப்படும் போது நன்மையைப் பெருக்குகின்ற பலதும் நம் வாழ்வில் வந்து சேர ஆரம்பிக்கும். நாம் எதில் அதிக ஆர்வம் காட்டுகிறோம் என்பதை முதலில் கவனியுங்கள்.
அடுத்தவர்களின் தவறுகளைக் கண்டுபிடிப்பதிலேயே அதிக ஆர்வம் காட்டுபவன் தன் தவறுகளை வளர்த்துக் கொள்கிறான். சில்லரை விஷயங்களிலேயே அதிக ஆர்வம் காட்டுபவன் அந்தத் தரத்திலேயே சாதித்து மடிகிறான். ஆர்வத்தின் தரத்தைப் பொறுத்தே பெறுகின்றதன் தரமும் அமையும்.

நீர் நிறைந்திருக்கும் டம்ளரில் பாலை நிரப்ப வேண்டுமானால் முதலில் நீரைக் கொட்ட வேண்டும். பின்பு தான் அதில் பாலை நிரப்ப முடியும். அது போல அற்ப விஷயங்களில் ஆர்வம் காட்டிக் கொண்டு பெரிய சாதனைகள் புரிய நாம் கனவு காண்பது வீணே. முதலில் அற்பங்களை அப்புறப்படுத்துங்கள். மேற்போக்கான ஆர்வத்தை ஏற்படுத்திக் கொண்டு உங்கள் வாழ்வில் அற்புதங்களை எதிர்பார்க்காதீர்கள். உங்கள் ஆர்வம் உங்களிடம் ஆழமாக இருக்குமானால் மட்டுமே அது காந்தத் தன்மை பெறும்.

இது வரை நாம் கவர்ந்தவற்றின் கணக்கை நம் வாழ்வில் ஆராய்வோம். எதற்கும் யாரையும் குறை கூறாமல் கவர்ந்து பெற்றதற்கான பொறுப்பை ஏற்றுக் கொள்வோம். இனி எதைக் கவர வேண்டும் என்று சிந்தித்து அவற்றை நம் மனதில் ஆழப் பதிப்போம். அதற்கான ஆர்வத்தையும், நம்பிக்கையையும் ஏற்படுத்தி அதைப் பலப்படுத்துவோம்.

இப்படி புதிய காந்த சக்தியை நம்மில் வளர்த்துக் கொண்டால் மீதியை இந்த பிரபஞ்ச விதிகள் பார்த்துக் கொள்ளும். வாழ்க்கை 

Friday 7 September 2018

கற்றல்

*வீர சிவாஜி ஒரு முறை*

*யாரையும் துச்சமாய் நினைக்காமல் எல்லோரிட மிருந்தும் எதைக் கற்றுக் கொள்ள முடியுமோ அதைக் கற்றுக் கொள்வோம்*...

வீர சிவாஜி ஒரு முறை முகலாய மன்னனிடம் இருந்து தப்பித்து மாறு வேடத்தில் ஊருக்குள் சுற்றிக் கொண்டிருந்தார் .
ரொம்பப் பசி எடுத்ததும் அருகில் இருந்த ஒரு வீட்டிற்குச் சென்று தனக்கு உணவளிக்குமாறு கேட்டுக்கொண்டார்.

அந்த வீட்டிலிருந்த வயதான பாட்டி அப்போது தான் சமைத்து முடித்திருந்தது."வாப்பா" என்றழைத்து சுட சுட சோற்றைப் பரிமாறியது.

அவசரக் குடுக்கையான சிவாஜி பசி தாளாமல் வேகவேகமாய் சுடு சோற்றின் நடுவே கைவைத்துச் சாப்பிட ஆரம்பித்தார்.அதிக சூட்டினால் சாப்பிட முடியாமல் தவித்தார்.

உடனே குறுக்கிட்ட பாட்டி...

ஏம்ப்பா .. நீயும் நம்ம சிவாஜி மாதிரி விவரம் புரியாத ஆளா இருக்கியே .. முதல்ல சுற்றி இருக்க சின்ன சின்ன கோட்டைகளை கவர்ந்துவிட்டு அப்பறமா பெரிய கோட்டைய ஆக்கிரமிக்கணும்...
எடுத்ததுமே மிகப் பெரிய விஷயத்துக்கு ஆச மட்டும் பட கூடாது.. அது போல நீ ஓரத்துல இருக்க சோற்றை முதலில் சாப்பிட்டு முடி... அதற்குள் நடுவில் இருக்கும் மலைக்குவியல் சோறு ஆறியிருக்கும்... பின் அதை சாப்பிடலாம் " என்றது ...

சிவாஜிக்குத் தூக்கி வாரிப் போட்டது... இருந்தும் பாட்டியின் சொல்லில் இருக்கும் நிஜத்தை புரிந்து கொண்ட சிவாஜி போர் நுணுக்கத்தை தனக்குச் சொல்லிக் கொடுத்த பாட்டியிடம் தான் தான் சிவாஜி என்று சொல்லாமலேயே, உணவளித்தமைக்கு நன்றி சொல்லி அந்த இடத்தை விட்டு வெளியே வந்தார்..

நமக்கான பாடம் பேச்சாளர்களிடமோ , பெரிய எழுத்தாளர்களிடமோ மட்டும் இருப்பதில்லை....

நாம் கடந்து செல்லும் ரோட்டில் எதிர் வரும் காலில்லாத மனிதனிடம் கூட இருக்கலாம்....
யாரையும் துச்சமாய் நினைக்காமல் எல்லோரிடமிருந்தும் எதைக் கற்றுக் கொள்ள முடியுமோ அதைக் கற்றுக் கொள்வோம்...

நன்றி.

கடந்து போகும்

*இதுவும்கடந்துபோகும்*

நம்முடைய இதுநாள் வரை வாழ்க்கையையும் திரும்பிப் பார்த்தால் இந்த வாக்கியத்தின் மகத்தான உண்மையை உணர முடியும்.

எத்தனை *வெற்றிகள்* ,
எத்தனை *தோல்விகள்* ,
எத்தனை *மகிழ்ச்சிகள்* ,
எத்தனை *துக்கங்கள்* ...

எல்லாம் வந்து சிறிது காலம் தங்கி கடந்து போயிருக்கின்றன.

வந்ததெல்லாம் நம்மை விட்டுப் போவதால் நம்முடையதல்ல என்பது உறுதியாகிறதல்லவா?

வந்து போவதெல்லாம் நம்முடையதல்ல என்பதால் நாம் வெறும் பார்வையாளர்களே அல்லவா?

எத்தனை *நண்பர்கள்* ,
எத்தனை *பகைவர்கள்* ,
எத்தனை *உறவுகள்* நம் வாழ்வில் முக்கிய அங்கம் வகித்து வெறும் நினைவுகளை மட்டும் நம்மிடம் விட்டு விட்டுப் போயிருக்கிறார்கள்?

வாழ்வில் வந்ததெல்லாம் நம்மைக் கடந்து சென்று கொண்டு தானே இருக்கின்றன.
ஒரு விதத்தில் என்றும் நாம் தனியர்களே அல்லவா?

இயற்கையின் விதியே இது என்று உளமார உணர்ந்து தெளியும் போது கிடைக்கும் அமைதி சாதாரணமானது அல்ல.
அந்த அமைதியை மனதில் நிரந்தரமாக்கிக் கொள்ளுங்கள்.

**வெற்றிகள்* கிடைக்கும் போது.,

*"#இதுவும்கடந்துபோகும்"* என்பதை நினைவில் கொள்ளுங்கள்...கர்வம் தலை தூக்காது.

*தோல்விகள் தழுவும் போது..,

*"#இதுவும்கடந்துபோகும்"* என்பதை நினைவில் கொள்ளுங்கள்...சோர்ந்து விட மாட்டீர்கள்.

*நல்ல மனிதர்களும், நண்பர்களும் உங்கள் வாழ்க்கையில் வரும் போது.,

*"#இதுவும்கடந்துபோகும்"* என்பதை நினைவில் கொள்ளுங்கள். இருக்கும் போது - அவர்களை கௌரவிப்பீர்கள்.அவர்கள் விலகும் போது பெரிதாக பாதிக்கப்படாமல் இருப்பீர்கள்.

*தீய மனிதர்களும், பகைவர்களும் உங்கள் வாழ்வில் வரும் போது..,

*"#இதுவும்கடந்துபோகும்"* என்பதை நினைவில் கொள்ளுங்கள். - தானாகப் பொறுமை வரக் காண்பீர்கள். பெரிதாக மனஅமைதியை இழக்க மாட்டீர்கள்.

*நெற்றி சுருங்கும் போதெல்லாம்..,

*"#இதுவும்கடந்துபோகும்"* என்பதை நினைவில் கொள்ளுங்கள்.- சுருக்கம் போய் முகத்தில் புன்னகை தவழக் காண்பீர்கள்.

வாழ்க்கையின் ஜீவநாதமாக இந்த உண்மை உங்கள் இதய ஆழத்தில் பதிந்து போய் விட்டால்.,

அந்தப் *புன்னகை* நிரந்தரமாக உங்கள் முகத்தில் தங்கி விடுவதை மற்றவர்கள் காண்பார்கள்...

சக்தியை மாற்றம் செய்ய

ஆன்மாவிற்கு ஒரு மருந்தகம் -ஓஷோ

காமசக்தியை மறுசீராக்குதல்.

நேராக அமருங்கள் – ஒரு நாற்காலி அல்லது தரையில். உங்கள் முதுகுத்தண்டு நேராக ஆனால் விரைப்பாக இல்லாமல் சாதாரணமாக.

மெதுவாக, ஆழமாக மூச்சை உள்ளே இழுங்கள்.  அவசரப்படாதீர்கள். மெதுவாக உள்ளே இழுத்துக் கொண்டேயிருங்கள்.

முதலில் வயிற்றின் மேல்புறம் மேலெழும், மூச்சை தொடர்ந்து உள்ளிழுத்துக் கொண்டேயிருங்கள். பிறகு மார்பில் காற்று நிறையும், இறுதியாக உங்கள் உடலில் கழுத்து வரைக்கும் காற்று நிரம்பியிருப்பதை உணர்வீர்கள். 

பிறகு ஒன்று அல்லது இரண்டு நொடி அந்த மூச்சை அப்படியே உள்ளே வைத்திருங்கள். சிரமமில்லாமல் எவ்வளவுநேரம் முடியுமோ அத்தனைநேரம் வைத்திருங்கள்.

பிறகு மூச்சை வெளியேவிடுங்கள்.  வெளியேவிடுவதும் மெதுவாக செய்ய வேண்டும், உடலில் காற்று குறைந்து கொண்டே வரும், வயிற்றின் மேல்புறம்வரை காலியானதும், உள்ளேஇழுத்துக் கொள்ளுங்கள். இப்போது எல்லாகாற்றும் வெளியேறும்.

இதேபோல் ஏழுமுறை செய்யவேண்டும்.
.
பிறகு மெளனமாக உட்கார்ந்து தொடர்ந்து `ஓம்..ஓம்.. ஓம்’ என்றுசொல்லுங்கள். `ஓம்’ என்பதை திருப்பித்திருப்பி சொல்லும்போது, உங்கள் கவனம் முழுவதும் உங்கள் இரண்டு புருவங்களுக்கு நடுவே நெற்றிப்பொட்டில் இருக்கவேண்டும். 

இப்போது சுவாசத்தை மறந்துவிடுங்கள். திருப்பிதிருப்பி `ஓம்..ஓம்.. ஓம்” என்று சொல்லுங்கள்.

ஒரு மயக்கநிலையில், குழந்தையை தூங்கச்செய்ய தாய்பாடும் தாலாட்டைப்போல சொல்ல வேண்டும். வாய் மூடியேயிருக்க வேண்டும். அப்போதுதான் உங்கள் நாக்கு உங்கள் வாயின் மேல்புறத்தை தொடும்,

உங்கள் முழுகவனமும் நடுநெற்றிப்பொட்டில், அதாவது மூன்றாவது கண்மீது இருக்கவேண்டும். இதை இரண்டு அல்லது மூன்று நிமிடங்களுக்கு செய்யவேண்டும். உங்கள் தலை முழுவதும் தளர்வதைபோல உணர்வீர்கள். அப்படி தளரத்துவங்கும்போது உள்ளே ஒரு இறுக்கம் மறைவதை, ஒரு பதட்டம் காணாமல் போவதை நீங்கள் உணர்வீர்கள்.
.
பிறகு உங்கள் கவனத்தை உங்கள் தொண்டைக்கு கொண்டு வாருங்கள். பிறகு உங்கள் கவனம் தொண்டையில் இருக்கும் படியே மீண்டும் `ஓம்’ என்று பலமுறை சொல்லியபடி இருங்கள்.

பிறகு உங்கள் தோள்கள், உங்கள் தொண்டை உங்கள் முகம் எல்லாமே தளர்வதை உணர்வீர்கள், ஒருசுமை குறைந்ததைப் போல, ஒருபாரம் இறங்கியதைப் போல, நீங்கள் எடையற்று இருப்பீர்கள்.
.
இன்னும் ஆழமாக மூச்சை விடுங்கள், உங்கள் கவனத்தை உங்கள் தொப்புளுக்கு கொண்டு வாருங்கள்.

பிறகு அந்த `ஓம்... என்பதை தொடருங்கள். நீங்கள் இன்னும் ஆழமாக, ஆழமாக, ஆழமாக போகிறீர்கள்.

பிறகு நீங்கள் உங்கள் பாலுணர்வு மையத்திற்கு வருவீர்கள்.  இது ஒரு பத்து அல்லது பதினைந்து நிமிடங்கள் பிடிக்கும். அதனால் மெதுவாக செய்யுங்கள், அவசரம் வேண்டாம்.
.
நீங்கள் உங்கள் பாலுணர்வு மையத்தை அடைந்தவுடன், உங்கள் முழஉடலுமே தளர்ந்திருக்கும்.

உங்களைச் சுற்றி ஒரு வெளிச்சம், ஒரு வட்டம், அல்லது ஒரு ஒளி சூழ்வதை உணர்வீர்கள். இப்போது நீங்கள் முழுசக்தியுடன் இருப்பீர்கள், ஆனால் அந்த சக்தி அதிர்வலைகளற்ற நீர்த்தேக்கமாக இருக்கும்.

அதே நிலையில் நீங்கள் விரும்புவரையில் இருக்கலாம்.
.
தியானம் முடிந்தது. இப்போது நீங்கள் அதை ரசிக்கிறீர்கள்.  அந்த `ஒம்’ என்பதை நிறுத்துங்கள். சும்மா உட்கார்ந்து கொண்டிருங்கள்.

சாய்ந்து கொள்ளலாம் என்று தோன்றும், ஆனால் நீங்கள் உங்கள் நிலையை மாற்றினால், அந்த சக்திநிலை விரைவில் காணாமல் போகும், அதனால் கொஞ்சம் உட்கார்ந்து ரசியுங்கள்.
.
ஏதோ ஒரு காரணத்தினால், உங்கள் முழுஉடலும் பதட்டமாக இருக்கும்போது, இதை செய்யுங்கள், அது உங்களுக்கு ஒரு முழுமையான ஒய்வைக் கொடுக்கும்.

உங்களது மனதில் எண்ணங்கள்
இல்லாத பாேது அது தியானமாகிறது ...

மனமானது இரண்டு நிலகைளில்
எண்ணங்கள் இல்லாமல் இருக்கும் ....

ஒன்று ஆழ்ந்த தூக்கம் ....
இரண்டு தியானம்.....

நீங்கள் விழிப்புணர்வுடன் இருக்கும் பாேது
எண்ணங்கள் மறைந்து விட்டால் அது தியானம் ...

எண்ணங்கள் மறைந்து அந்த நேரத்தில் நீங்கள்
விழிப்புணர்வுடன் இல்லாமல் இருப்பது தான் ஆழ்ந்த
தூக்கம் ...

ஆனால் ஆழ்ந்த தூக்கத்தாேடு நீங்கள் விழிப்புணர்வை
யும் சேர்ப்பது தியானத்திற்கு சமமாகிறது ...

அப்பாேது நீங்கள் ஆழ்ந்த தூக்கத்தில் இருப்பது
பாேல் முழு ஓய்வுடன் இருப்பீர்கள் ...

என்றாலும் கூட விழிப்புணர்வுடன் முழுவதம்
விழித்துக் காெண்டு இருப்பீர்கள் ....

இதுதான் உங்களை பெரும் ரகசியங்களின்
வாசலுக்கு காெண்டு பாேய் விடும் ...

இதுதான் தூங்காமல் தூங்கி சுகம் பெறும்
நிலையாகும் ...

எனவே தியானம் என்றால் நீங்கள் ஆழ்ந்த
தூக்கத்தில் எப்படி ஓய்வுடன் இருக்கிறீர்களாே ....

அப்படியே இருந்து காெண்டு அதே நேரத்தில் விழிப்புணர்வுடன் இருப்பதாகும் .