அனைவருக்கும் அன்பு வணக்கம்🙏🙏🙏🙏
இது ஒரு புதிய முறை இந்த முறையை நீங்கள் ஏற்கனவே உங்கள் வாழ்க்கையில் பல பேர் பண்ணியிருந்தாலும் மிகவும் மகிழ்ச்சி மேலும் இதை பண்ணினால் மிகவும் ரொம்ப மகிழ்ச்சி.
இவ்வளவு பிரபஞ்சம் சம்பந்தமாக புத்தகங்கள் படிக்கிறீர்கள் அதிகமாக, ஆனால் புத்தகத்தை தேடி தயவுசெய்து அதிகமாக செல்லாதீர்கள்.
புத்தகம் வேண்டும் ஆனால் புத்தகம் மட்டுமே வாழ்க்கை இல்லை. நீங்கள் இதை நேரடியாக இறை சக்தியுடன் தொடர்பு கொள்ளுங்கள் இறை சக்தியை உள் வாங்குங்கள்.
இந்த முறையை செய்து விட்டால் பிரபஞ்சத்தின் ஒரு ஏணியை ஏறி விடுவீர்கள் என்று என்னால் உறுதியாக கூற முடியும். உங்களது ஈகோ சுக்குநூறாக உடையும். மனசு லேசாகும்.
உங்கள் வீட்டிலில் உள்ள மரம், பக்கத்தில் எங்கேயாவது உள்ள மரம், எங்க வேண்டுமானாலும் சரி ஒரு மிகப்பெரிய மரம் அதற்கு முதலில் குறைந்தபட்சம் ஒரு லிட்டர் தண்ணீராவது ஊற்றிவிட வேண்டும் தண்ணீர் ஊற்றும் பொழுது அதில் உங்கள் அன்பு மட்டுமே இருக்க வேண்டும் தண்ணீரை நீங்கள் குடிப்பது போல் இருக்கும் தண்ணீரை மரத்திற்கு கொடுக்க வேண்டும் (நோ கேன் வாட்டர்.)
பிறகு உங்களது இதயப் பகுதி மற்றும் உங்களது நெற்றிப் பகுதி மரத்தோடு ஒட்டியிருக்க வேண்டும். கட்டிப்பிடித்து உங்களுடைய கஷ்டங்களை அப்படியே கொட்டி விடாதீர்கள் அந்த மரம் பாவம் முதலில் அன்பை செலுத்துங்கள் நீ கொடுக்கின்ற ஆக்சிஜன் தான் இதுவரை நாங்கள் வாழ்ந்த நாட்களுக்காக உனக்கு நன்றி கூறுகிறேன்.
அந்த நன்றி இதுவரை கூறியதில் இருக்கக்கூடாது அப்படி ஒரு உணர்வு பூர்வமாக நீங்கள் கூற வேண்டும் அப்படி ஒரு பாசம் இருக்க வேண்டும் உங்கள் குழந்தையை முதன்முதலில் எப்படி கையில் வாங்கும் போது எந்த அளவுக்கு அன்பு வைத்தீர்கள் அதைவிட பலகோடி மகிழ்ச்சியோடு அன்பை செலுத்த வேண்டும்.
பிறகு உங்களுடைய கஷ்டங்களை நீக்கியதற்கு நன்றி கூறுங்கள். கூறிவிட்டு உங்களுடைய அனைத்து கஷ்டங்களும் வலிகளும் எல்லாமே அழிந்துவிட்டது போல் இமேஜின் பண்ணுங்க அந்த மரத்திற்கு நன்றி கூறிக்கொண்டே.
ஒரு சில பேருக்கு மிகவும் அழுகை வரும் மனசு ரொம்ப லேசாகி சந்தோசத்தை உணர்வீர்கள்.
உங்களுடைய கைகள் உடம்பின் வழியாக அந்தக் கெட்ட எனர்ஜி உங்களை விட்டு செல்வதை நீங்கள் உணர முடியும். பிறகு அன்பு என்னும் சக்தியால் நீங்கள் சூலப் படுவீர்கள்.
இணைபிரியாது மகிழ்ச்சி பல ஆண்டுகளுக்கு முன்னர் போல். இப்படி தான் நாம் வாழ்ந்து கொண்டிருந்தோம் நண்பர்களே.
உங்களுக்கு என்ன வேண்டுமோ நீங்கள் அந்த மரத்திடம் கேளுங்கள் அந்த மரம் உங்களுடைய உண்மையான தாய் தான் இதை பல விஞ்ஞானிகள் கூறியிருக்கிறார்கள் ஒரு குழந்தை தாய் கிட்ட எப்படி கேட்குமோ உங்களுக்கு என்ன வேண்டுமோ கேளுங்கள் கண்டிப்பாக கொடுக்கும் அன்பு பாசம் செல்வ செழிப்பு மற்றும் அனைத்து வளமும் கண்டிப்பாக கிடைக்கும்
உங்களுடைய ஈகோ சுக்கு நூறாக உடைந்து விடும் என்று என்னால் தைரியமாக கூற முடியும் இது ஒரு அற்புதமான விஞ்ஞானம் விஞ்ஞானம் என்று சொன்னால் மட்டுமே தான் பலர் ஒத்துக் கொள்கிறீர்கள்.
அப்பொழுதே நீங்கள் இறை சக்தி உடன் அப்போது இணைந்து விடுவீர்கள் இதுவரை நீங்கள் கண்டிராத இந்த ஒரு அற்புதமான ஒரு மகிழ்ச்சி நீங்கள் அடைவீர்கள்.
உங்களது உள்ளுணர்வு உங்களிடம் பேச ஆரம்பித்துவிடும். அதை நீங்கள் கவனிக்கத் தொடங்கினால் மட்டுமே போதும்.
இறுதியாக உங்கள் வீட்டிலுள்ள அரிசி குறைந்தபட்சம் ஒரு கைப்பிடி அவற்றை கழுவி காயவைத்து மிக லேசாக உங்கள் வீட்டிலுள்ள மிக்ஸியில் அரைத்து வைத்துக்கொள்ளவேண்டும் ஒரு எறும்பு தூக்கிக்கொண்டு செல்லும் அளவிற்கு. இறுதியாக அந்த அரிசிமாவை மரத்தை சுற்றி பல இடங்களில் தூவி விட வேண்டும் அந்த அரசி மாவு பல உயிர்களுக்கு
உணவாகும்.
. வாருங்கள் பிரபஞ்சத்தின் குழந்தையாக இணைவோம்.🙏🙏🙏🙏
நன்றி.