Friday 25 August 2017

அன்பு சக்தியும் படைப்பும்

அன்பு சக்தியும் படைப்பும்
1. நீங்கள் விரும்பும் ஒன்றை உங்களிடம் கொண்டு வருவதானாலும் சரி , அல்லது உங்களுக்கு விருப்பமில்லாத ஒன்றை நீங்கள் மாற்ற விரும்பினாலும் சரி, அதற்கான செயல்முறை ஒன்றுதான்: கற்பனை செய்யுங்கள் ..உணருங்கள்..பெறுங்கள்.
2. உங்கள் கற்பனை நீங்கள் விரும்பும் விசயத்துடன் உங்களை இணைக்கிறது. உங்கள் விருப்பமும், அன்பு உணர்வுகளும் காந்த சக்தியை உருவாக்குகின்றன. அந்தக் காந்த சக்தி உங்கள் விருப்பத்தை உங்களிடம் ஈர்த்து வருகிறது.
3. நீங்கள் உங்கள் விருப்பத்துடன் இனைந்து இருப்பதுபோல கற்பனை செய்ய வேண்டும்.அதே நேரத்தில் ,நீங்கள் கற்பனை செய்து கொண்டிருக்கும் விஷயங்கள் குறித்து அன்பாக உணரவேண்டும்.
4. நீங்கள் ஆழமாக விரும்பும் ஒரு விஷயத்தை உங்கள் இதயபூர்வமாக விரும்பவேண்டும். ஏனெனில் ,விருப்பம் என்பது அன்பு உணர்வு. நீங்கள் நேசிப்பதை பெற , நீங்கள் அன்பை கொடுக்க வேண்டும்!
5. நீங்கள் விரும்பும் எந்தவொரு நேர்மறையான விசயத்தையும் கற்பனை செய்து ,அதன் மீது அன்பு செலுத்தும்போது ,நீங்கள் அன்பின் ஆற்றலை பயன்படுத்துகிறீர்கள்..உங்கள் கற்பனையின் எல்லைகளைத் தகர்த்தெறிந்து , உங்களால் முடிந்த அளவுக்குச் சிறப்பான, மென்மையான விளைவைக் கற்பனை செய்யுங்கள்.
6. உங்களால் கற்பனை செய்ய முடிகின்ற எந்தவோர் ஆழமான விருப்பமும் ஏற்கனவே படைக்கப்பட்டு விட்டது. அது எதுவாக இருந்தாலும் சரி, ஒன்றை உங்களால் கற்பனை செய்ய முடிந்தால் , அது ஏற்கனவே படைப்பில் உள்ளது என்று பொருள்.
7. உங்கள் உரையாடல்களிலும் ,உங்கள் என்னங்ககளிலும் , "_____நடந்தால் எப்படி இருக்கும் !" என்று கூறி , நீங்கள் விரும்பும் விசயங்களைக் கொண்டு அந்த வாக்கியத்தின் முதற்பகுதியை பூர்த்தி செய்யுங்கள்.
8. நீங்கள் கற்பனை செய்வதற்கு உதவும் சில பொருட்களைப் பயன்படுத்துங்கள், துணிகள் , படங்கள், புகைப்படங்கள், உங்கள் விருப்பத்திற்குப் பொருத்தமான பொருட்கள் ஆகியவை உங்களைச் சூழ்ந்திருக்கும்படிச் செய்யுங்கள். அப்போது ,நீங்கள் விரும்பும் விசயங்களை நீங்கள் ஏற்கனவே பெற்றுவிட்டதாக உங்களால் உணர்வுப்பூர்வமாகக் கற்பனை செய்ய முடியும்.
9. உங்கள் புலன்களும் உங்கள் கற்பனைக்கு உதவும் பொருட்கள்தான். எனவே, நீங்கள் விரும்புவதை நீங்கள் ஏற்கனவே பெற்றுவிட்டதாக உணர்வதற்கு உங்கள் புலன்களையும் தொட்டுப் பாருங்கள். ருசித்துப்பாருங்கள், முகர்ந்து பாருங்கள், கண்களால் பாருங்கள். காதுகளால் கேளுங்கள்.
10. படைப்புச் செயல்முறையில் நீங்கள் உங்கள் பங்கை ஆற்றி முடிந்தவுடன், படைப்பு நிறைவேறிவிட்டது என்பதை அறிந்து கொள்ளுங்கள். உங்களால் பார்க்க முடியாவிட்டாலும் கூட ,நீங்கள் விரும்பிய அந்த விசயத்தைக் கொண்ட ஒரு புதிய உலகிற்குள் நீங்கள் இடம்பெயர்ந்துவிட்டீர்கள் . அதை நீங்கள் நிச்சயமாக பெறுவீர்கள் என்பதை அறிந்து கொள்ளுங்கள். அதற்காக நன்றி சொல்லுங்கள்..
நன்றி.நன்றி..நன்றி...

உணர்வு அலைவரிசை

உணர்வு அலைவரிசை
1. பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தும் காந்த சக்தி கொண்டவை. அனைத்திற்கும் ஒரு காந்த அலைவரிசை உள்ளது.உங்கள் எண்ணங்கள் மற்றும் உணர்வுகள் உள்பட.
2. உங்களது உணர்வுகள் நல்லவையாக இருந்தாலும் சரி அல்லது மோசமானவையாக இருந்தாலும் சரி , அவைதான் உங்கள் அலைவரிசையை தீர்மானித்து, அதே அலைவரிசையில் உள்ள மக்களையும் , நிகழ்வுகளையும் ,சூழல்களையும் ஒரு காந்தம்போல் உங்களிடம் கவர்ந்திழுக்கின்றன.
3. நீங்கள் உணரும் விதத்தை மாற்றுவதன் மூலம் எந்த நேரத்திலும் உங்கள் அலைவரிசையை உங்களால் மாற்ற முடியும் .அப்போது நீங்கள் ஒரு புதிய அலைவரிசையில் இருப்பதால் , உங்களைச் சுற்றியுள்ள அனைத்தும் மாறும்.
4. உங்கள் வாழ்வில் ஏதேனும் ஓர் எதிர்மறையான விஷயம் நிகழ்ந்திருந்தால் ,அதை உங்களால் மாற்ற முடியும். அதற்குக் காலம் கடந்து விடவில்லை. ஏனெனில், நீங்கள் உணரும் விதத்தை உங்களால் எப்போதும் மாற்ற முடியும்.
5. பெரும்பாலான மக்கள் தங்கள் உணர்வுகள் தாமாக இயங்க அனுமதிக்கின்றனர். அவர்களுக்கு ஏற்படும் நிகழ்வுகளுக்கு அவர்கள் ஆற்றும் எதிர்வினைகள்தான் அவர்களது உணர்வுகள். தங்களுக்கு நேர்ந்து கொண்டிருக்கும் விஷயங்களுக்குக் காரணம் தங்கள் உணர்வுகள்தான் என்பதை உணர்வதில்லை.
6. பணம், ஆரோக்கியம், உறவுகள் அல்லது வேறு எந்த விஷயம் தொடர்பான சூழல்கலானாலும் சரி ஒன்றை மாற்ற வேண்டும் என்றால், நீங்கள் உணரும் விதத்தை நீங்கள் மாற்ற வேண்டும்.
7. பழி சுமத்துதல் , விமர்சித்தல் ,குற்றம் கண்டுபிடித்தல் , குறைகூறுதல் ஆகிய அனைத்தும் எதிர்மறைத் தன்மையின் பல வடிவங்கள். அவை அனைத்தும் சச்சரவுகளைத் தவிர வேறு எதையும் கொண்டு வருவதில்லை.
8. கொடுமையானது,கொடூரமானது .அருவருப்பானது போன்ற வார்த்தைகளை உங்கள் பேச்சில் இருந்து தூக்கி எறிந்துவிடுங்கள். அருமை ,அற்புதம், பிரமாதம் போன்ற அதிகமான வார்த்தைகளைப் பயன்படுத்துங்கள்.
9. வெறும் ஐம்பத்தொரு சதவீத நல்ல எண்ணங்களையும் நல்ல உணர்வுகளையும் நீங்கள் கொடுத்தால்கூட, உங்கள் வாழ்வின் தராசு முள்ளை மறுபக்கமாகச் சாய்த்துவிடலாம்!
10. ஒவ்வொரு நாளும் ஒரு புதிய வாழ்க்கைக்கான ஒரு வாய்ப்பாக விளங்குகிறது. ஏனெனில் , ஒவ்வொரு நாளும் உங்கள் வாழ்வின் தராசு முள் சாயும் இடத்தில் நீங்கள் நின்று கொண்டிருகிறீர்கள். என்றேனும் ஒரு நாள், எதிர்காலத்தை உங்களால் மாற்ற முடியும். நீங்கள் உணரும் விதத்தின் மூலமாக!
நன்றி.நன்றி..நன்றி..

Wednesday 23 August 2017

ஆரோக்கியதிற்கான மேஜிக் .

உங்கள் ஆரோக்கியதிற்கான மேஜிக் .
.
உங்களின் எண்ணங்களும் , உணர்வுகளும் தான் உங்கள் உடலை இயக்குகிறது என்ற உண்மையை புரிந்து கொள்ளுங்கள். 
.
நீங்கள் மனது வைத்தால் உங்கள் உடலுக்குள் நீங்கள் நுழைந்து கட்டுபடுத்த முடியும்
.
நீங்கள் நோய் /உடல் பிரச்சனைகளை குறித்து மனஉளைச்சல்களில் தவித்து கொண்டு இருந்தாலோ அல்லது அதை பற்றி மற்றவர்களிடம் எடுத்து கூறி கொண்டு இருந்தாலோ
உங்கள் நோயின் அணுக்களை அதிகபடுத்துகிறேர்கள்
.
உங்கள் நோய் / உடல் பிரச்சனைகள் ஏற்கனவே குணமாகி விட்டதென முழுதாக நம்புங்கள், உங்களை குணமாக்கியதற்கு மனதார நன்றி என தினமும் கூறி கொண்டே இருங்கள்.
.
உங்களை நீங்களே குணப்படுத்தி கொள்ள முடியும்....
.
மன இறுக்கம் இல்லாமல் எப்போதும் உங்களுக்கு சந்தோசம் தரும் விசயங்களை எல்லாம் பட்டியலிட்டு அவற்றை மனதார நேசித்து செய்யுங்கள்.
.
நீங்கள் நல்ல ஆரோக்கியமான உடலுடன் வாழ்வதாக உணருங்கள். எப்போதும் சந்தோஷமாக உணருங்கள்...
.
நன்றி ஆரோக்கியமே
நன்றி உடலே
என் நோய் எதிர்ப்பு சக்திக்கு நன்றி
என்னை குணமாக்கியதற்கு நன்றி
என்று அடிக்கடி தினமும் மனதார நன்றி கூறி கொண்டே இருங்கள்.
.
இதன்மூலம் உங்களின் எண்ணங்கள் மற்றும் உணர்வுகளின் அலைவரிசை மாற்றபட்டு ..
உங்கள் நோய் / உடல் பிரச்சனைகள் குணமடைந்து ஆரோக்கியமான நிலையை அடைவீர்கள்.
.
1. காலை எழுந்த உடன் ஆழ்ந்த அமைதியுடன் " ஆரோக்கியம் என்னும் பரிசு என்னை ஜீவனோடு வைத்திருக்கிறது " என்பதை மனதிற்குள் சொல்லிகொண்டே ஐந்து நிமிடங்களாவது தியானம் செய்யுங்கள்...
.
2. காலையில் இரண்டு டம்ளர் தண்ணீர் குடியுங்கள்..
3. ஹெட்போன் மூலம் நல்ல இசையை மற்றும் பாடல்களை கேளுங்கள்
.
4. குழந்தைகளுடன் பேசுங்கள், விளையாடுங்கள் , மனம் விட்டு சிரியுங்கள்.....அல்லது சின்ன குழந்தைகளின் குறும்பான வீடியோகளை பார்த்து ரசியுங்கள்...எவ்வளவு மனம் விட்டு சிரிகிறேர்களோ..அவ்வளவு மனபாரம் குறையும்...
.
5. காலை வேலையில் நியூஸ்பேப்பரில் செய்திகளை படிக்காதீர்கள், பார்க்காதீர்கள்....
.
6. மொட்டை மாடி இருந்தால் அங்கு சென்று காலை குளிரில் மற்றும் இளம் வெயிலில் வாக்கிங் செல்லுங்கள்
.
7. கை கால்களை மடக்கி நீட்டுங்கள், உடற்பயிற்சி செய்யுங்கள்..இதன்மூலம் ரத்தம் ஓட்டம் புத்துணர்ச்சி அடைந்து உறுப்புக்கள் சுறுசுறுப்பாக ஆகட்டும்
.
தினமும் இதை செய்து பாருங்கள்...தினமும் உங்களால் நம்ப முடியாத மாற்றத்தை உணர்வீர்கள்.

உணர்வுகளின் சக்தி

உணர்வுகளின் சக்தி
1. ஏதோ ஒரு கணத்தில் நீங்கள் எவ்வாறு உணர்கிறீர்கள் என்பது மற்ற எதையும்விட அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாகும். ஏனெனில் , இக்கணத்தில் நீங்கள் உணரும் விதம்தான் உங்கள் வாழ்க்கையை உருவாக்கிக் கொண்டிருக்கிறது.
2. உங்கள் உணர்வுகள்தான் உங்கள் எண்ணங்கள் மற்றும் வார்த்தைகளுக்கான சக்தி.நீங்கள் எவ்வாறு உணர்கிறீர்கள் என்பதுதான் முக்கியம்.
3. அனைத்து நல்ல உணர்வுகளும் அன்பில் இருந்துதான் வருகின்றன. அனைத்து எதிர்மறையான உணர்வுகளும் அன்பின் பற்றாக்குறையில் இருந்து வருகின்றன.
4. ஒவ்வொரு நல்ல உணர்வும் அன்பின் ஆற்றலோடு மீண்டும் உங்களை இணைக்கிறது. ஏனெனில் அன்புதான் அனைத்து நல்ல உணர்வுகளுக்கான மூலம்.
5. நீங்கள் நேசிக்கும் அனைத்து விசயங்களையும் பற்றி நினைப்பதன் மூலம் உங்கள் நல்ல உணர்வுகளை அதிகரித்துக் கொள்ளுங்கள். நீங்கள் தொடர்ந்து நேசித்து வரும் விசயங்களை ஒவ்வொன்றாக கணக்கிடுங்கள். நீங்கள் அற்புதமாக உணரும்வரை, நீங்கள் நேசிக்கும் அனைத்து விசயங்களையும் பட்டியலிடுங்கள்.
6. உங்கள் வாழ்வில் உள்ள ஒவ்வொரு விசயத்தைப் பற்றியும் எவ்வாறு உணர்கிறீர்கள் என்பது அந்த ஒவ்வொன்றின் மீதும் நீங்கள் எப்படிப்பட்ட உணர்வுகளை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறீர்கள் என்பதன் துல்லியமான பிரதிபலிப்பு.
7. வாழ்க்கை தானாகவே உங்களுக்கு நிகழ்ந்து கொண்டிருக்கவில்லை. அது உங்களுக்குச் செயல்விடை அளித்துக் கொண்டிருக்கிறது! உங்கள் வாழ்வின் ஒவ்வொரு விசயமும் உங்கள் அழைப்பின் பேரில் நிகழ்வதுதான். நீங்கள் வெளிப்படுத்தும் உணர்வுகள் மூலம், வாழ்வில் உள்ள அனைத்து விசயங்களையும் நீங்கள் கட்டளையிட்டு அழைக்கிறீர்கள்.
8. நீங்கள் உணரக்கூடிய நல்ல உணர்வுகளுக்கு எல்லையற்ற நிலைகள் உள்ளன. அப்படியென்றால், உங்கள் வாழ்வில் நீங்கள் சென்றடையக்கூடிய சிகரங்களுக்கு முடிவே இல்லை என்று பொருள்.
9. நீங்கள் விரும்பும் அனைத்து விசயங்களும் உங்களை விரும்புகின்றன. பணம் உங்களை விரும்புகிறது .ஆரோக்கியம் உங்களை விரும்புகிறது. மகிழ்ச்சி உங்களை விரும்புகிறது.
10. உங்கள் வாழ்வின் சூழல்களை மாற்றுவதற்குப் போராடாதீர்கள் .உங்கள் நல்ல உணர்வுகள் மூலம் அன்பை வெளிப்படுத்துங்கள். அப்போது நீங்கள் விரும்பும் விஷயங்கள் தோன்றும்.
11. முதலில் நீங்கள் நல்ல உணர்வுகளை கொடுக்க வேண்டும் . மகிழ்ச்சியான விசயங்களைப் பெறுவதற்கு, முதலில் நீங்கள் மகிழ்ச்சியான விசயங்களை பெறுவதற்கு , முதலில் நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும், மகிழ்ச்சியைக் கொடுக்க வேண்டும்..உங்கள் வாழ்வில் நீங்கள் எதைப்பெற விரும்பினாலும் , முதலில் நீங்கள் அதைக் கொடுக்க வேண்டும்.
உற்சாகம் எப்போதும் உங்களுடன் இருக்கட்டும்
நன்றி.நன்றி..நன்றி...

Sunday 20 August 2017

கர்ம விதிகள்

உங்கள் வாழ்க்கையை மாற்ற வல்ல மகத்தான 12  கர்ம விதிகள்

1. மகத்தான விதி  "காரணி மற்றும் விளைவு விதி " “Law of Cause and Effect.”

" எதை விதைக்கிறாயோ அதையே அறுக்கிறாய் "
நம்முடைய எண்ணங்களுக்கும் , செயல்களுக்கும் விளைவுகள் உள்ளன. அவை நல்லவையாக இருந்தாலும் சரி  கெட்டவையாக   இருந்தாலும் சரி. அமைதி, அன்பு , நல்லிணக்கம் ,வளமை ஆகியவற்றை விரும்பினால் அவையே நமக்கு கிடைக்கும்.. ,,இந்த உலகில் நாம் இடும் ஆற்றலுக்கு (எண்ணமும், செயலும்) உடனடியாகவோ அல்லது காலம் கழித்தோ கட்டாயம்  விளைவு உண்டு .

2 படைத்தல் விதி ( Law of creation )

வாழ்க்கையில் எதுவுமே அதுவாக நடப்பதில்லை , நாம் அதை நடக்க வைக்க வேண்டும் ..நாம் எதை விரும்புகிறமோ அவை நம்முடைய பங்களிப்பு மூலமாக நமக்கு வருகிறது.  நம்மை சுற்றியுள்ள அனைத்துமே யாரோ ஒருவரின் எண்ணத்தில் உதித்தது தான்.நாமும் இந்த  பிரபஞ்ச சக்தியோடு ஒன்றிணைந்து இருப்பதால் படைப்பின் பரிணாம வளர்ச்சியில்  நம்முடைய நோக்கங்களும் இருக்கிறது .ஆகவே  நமக்கும் நம்மைச்சுற்றியுள்ள சமூகத்தின் விருப்பத்திற்கும்  உகந்ததாக நம்முடைய படைப்பு இருக்குமாறு பார்த்துக்கொள்வது நமது பொறுப்பாகும் ..

3 பணிவு விதி ( Law of Humility )

மிகப்பெரிய மாற்றங்கள் வருவதை நாம் மனமுவந்து ஏற்றுக்கொள்ள வேண்டும். ஏற்றுக்கொள்ளும் தன்மை என்பது பிரபஞ்ச கோட்பாடாகும் .இது எல்லா அமைப்புகளிலும் உள்ள விதி.பெரிய மாற்றங்களை வேண்டினாள் நிகழ்கால சூழ்நிலைகளை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்..அதே சமயம் எதிர்மறையான விஷயங்களை மாற்ற எதிர்மறையான போக்குகளை கடைபிடித்தால் கடைசியில் அதன் விடை பூஜ்யமாகத்தான் இருக்கும்

4 வளர்ச்சிவிதி ( Law of Growth)

நமது சுயவளர்ச்சி எப்பொழுதும் எந்த சூழ்நிலையிலும் நம் கையில் தான் உள்ளது.. நாம் கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஒரே நபர் நாம்தான்..நாம் மாறும்பொழுது நமதுவாழ்க்கையும் அதற்கேற்றாற்போல் நம்முடன் சேர்ந்து மாறுகிறது .உண்மையான வளர்ச்சி அல்லது மாற்றம் நாம் எப்பொழுது முழுமனதோடு அர்ப்பணித்து மாறுகிறோமோ அப்பொழுதான் நடக்கிறது..

5 பொறுப்பு விதி ( Law of Responsibility )

நம் வாழ்க்கையில் நடக்கும் அனைத்து விஷயங்களுக்கும் நாம் பொறுப்பேற்கவேண்டும், நம்முடைய வாழ்க்கை நாம் செய்வதில்தான் உள்ளது வேறெதினாலும் கிடையாது.. வாழ்க்கையில் ஒருவருக்கு ஒரு தடுமாற்றம் வரும்பொழுது மனதில் நிறைய தடுமாற்றங்கள் வருகின்றன. அதை மாற்ற வேண்டுமென்றால் நமது எண்ணங்களை மாற்றி பிறகு நம்மைச்சுற்றியுள்ளவற்றை மாற்றவேண்டும் ..

6 தொடர்பு விதி ( Law of Connection )
இந்த பிரபஞ்சத்தில் உள்ள அனைத்துமே ஒன்றுக்கொன்று தொடர்புள்ளவை .பெரியதாக இருந்தாலும் சரி , சின்னதாக இருந்தாலும் சரி. நமது கடந்த காலம் நிகழ்காலம் எதிர்காலம் எல்லாமே ஒன்றுக்கொன்று தொடர்புடையபவை.  இந்த தொடர்புகளை பயன்படுத்தி நாம் விரும்பும் மாற்றத்திற்கு வழி செய்ய வேண்டும்.

7 கவன விதி ( Law of Focus )

ஒருவனால் ஒரே நேரத்தில் பல பணிகளில் கவனத்தை செலுத்தமுடியாது ,, ஒரே நேரத்தில் இரண்டு விஷயங்களை சிந்திக்க முடியாது , நமது ஆன்மீக வளர்ச்சியை எடுத்துக்கொண்டால் ஒரே நேரத்தில் எதிர்மறை சிந்தனை மற்றும் செயல்களை கொண்டு அதனை அடைய முடியாது ,நமது முழுக்கவனத்தையும் ஒரே பணியில் இருத்தி அதனை அடைய வேண்டும்..

8 விருந்தோம்பல் மற்றும் கொடுத்தல் விதி ( Law of hospitality and giving)

நம்முடைய பழக்கவழக்கங்கள் நமது எண்ணங்கள் மற்றும் செயல்களோடு ஒத்துப் போகவேண்டும் . நமது சுயநலமற்றதன்மையை செயல் விளக்கம் அளிப்பதே நமது உள்நோக்கமாக இருக்க வேண்டும்..சுயநலமின்மை என்ற கோட்பாடு ஏதாவது நமக்கில்லாமல் இந்த சமுதாயத்திற்கு பண்ணும்பொழுதுதான் தெரியும் அதுவே மிகப்பெரிய சந்தோசம்.. ஒரு சுயநலமிமையில்லாமல் ஆன்மீக வளர்ச்சி என்பது இல்லவே இல்லை..

9 மாற்றம் விதி (Law of Change )

மாற்றம் இல்லாவிட்டால் அதே வரலாறு திரும்ப திரும்ப வரும் . மாற்றத்திற்கான மனப்பூர்வமான அர்ப்பணிப்பு மட்டுமே கடந்த காலத்தை மாற்ற வல்ல ஒரே வழி.  நேரமறையான அழுத்தங்களும் மாற்றங்களும் இல்லையென்றால் வரலாறு மாறாது..

10 இங்கே இப்பொழுதே விதி : Law of NOW and HERE

நாம் அனைவரிடமும் இருப்பது நிகழ்காலம் மட்டுமே
வருத்தத்துடன் கடந்த காலத்தை பார்ப்பதும் , பயத்துடன் எதிர்காலத்தை பார்ப்பதும் நிகழ்காலத்தை கொள்ளையடித்துவிடும், பழைய முறை சிந்தனைகளும் நடத்தை முறைகளும் நிகழ்காலத்தை அழித்து மாற்றங்களை வர விடாது..

11 பொறுமை மற்றும் வெகுமதி  விதி ( Law of Patience and Rewards)

பொறுமையான மனநிலை இல்லாமல் எந்த ஒரு மகத்தானத்தையும் அடைய முடியாது.பொறுமையும் விடாமுயற்சியும் அனைத்து வெற்றிக்குமான வெகுமதியை பெற வழிகளாகும்,வேறெந்த வழியுமில்லை. 
வெகுமதிகள் மட்டுமே  விடையின் கடைசி அல்ல , சத்தியம் , நீடித்த சந்தோசம் மற்றும் உற்சாகம் அனைத்துமே எதை சரியாக இந்த உலக மற்றும் நமது சந்தோஷத்திற்காக  செய்யவேண்டும் என்பதை அறிந்து செய்வதில்தான் இருக்கிறது..

12. முக்கியத்துவம் மற்றும் அகத்தூண்டுதல் விதி ( Law of Signifigance and Inspiration)

நாம் அளித்த ஆற்றல் மற்றும் முயற்சியின் இறுதி வடிவம் தான் நமக்கு கிடைக்கும் வெற்றி .. ஆகவே முழுமனது மற்றும் அகத்தூண்டலுடன் சுயநலமில்லாமல் நாம் செய்யும் அனைத்துமே மிக முக்கியத்தும் மிக்கவை,,காலத்தாலும் மறக்காத காரியமாக இருக்கும்..