*அழகான நேரங்கள்..!!*
உங்கள் வாழ்க்கை வளமாக உங்களுக்காக சில நிமிடங்களை நீங்கள் செலவிட்டே ஆகவேண்டும்.
எனக்கு நேரமில்லை. என்னால் நேரத்தை ஒதுக்க முடியாது என்பதெல்லாம் வெறும் கட்டுக்கதை.
ஒரு நாளின் இருபத்தி நான்கு மணிநேரங்களில் நமக்கான நேரம் இல்லை என்றால் வெட்கப்பட வேண்டும்.
நம்மை நாம் செதுக்கி கொள்ளவும் நம்மை நாம் யாரென்று உணரவும் நமது எண்ணங்களை செயல்பாடுகளாக மாற்றவும்.
அந்த செயல்பாடுகளில் வெற்றி பெறவும் நமக்கான கால நேரம் மிகமிக அவசியம்.
ஒரு நாளின் துவக்கத்தை மிக அழகாக மாற்றும் சக்தி உங்கள் ஒருவருக்கே உண்டு என்பதனை மறந்து விடாதீர்கள்.
அதிகாலையில் எழுந்து கொள்வதை வழக்கமாக்கி கொள்ளுங்கள்.
இந்த வழக்கம் உங்களை மிக உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்லும். இது வெற்றியாளர்களின் வாழ்க்கையில் நடந்த உண்மை.
அதிகாலை துயில் எழுந்து விட்டால் மட்டும் போதாது.
உங்களையும் உங்கள் சிந்தனைகளையும் லட்சியங்களையும் உங்களுக்காக உங்கள் வாழ்க்கை வளமானதாக மாற மாற்றிக்கொள்ளுங்கள்.
யாருக்காகவும் நீங்கள் மாறவேண்டாம்.
அது உங்கள் சுயத்தினை தொலைத்து விடும். உங்கள் கொள்கைகளை மாற்றுங்கள். உங்கள் நடவடிக்கைகளை மாற்றுங்கள். உங்கள் சூழ்நிலையை மாற்ற முயற்சி செய்யுங்கள்.
உங்கள் பழக்கவழக்கங்களை மாற்றுங்கள். உங்கள் பேச்சை குறைத்து செயலில் வேகத்தையும் உறுதியையும் கூட்டுங்கள்.
உங்களுக்காக நீங்கள் ஒதுக்கிய நேரத்தில் உங்கள் வாழ்கையை மாற்றி அமைக்கும் காரணிகளை பற்றி ஒரு புத்தகத்தில் எழுதுங்கள்.
இன்னும் சில வருடங்களில் நீங்கள் என்னவாக வேண்டும் என்பதனை எழுதுங்கள்.
நீங்கள் அடைய வேண்டிய குறிக்கோள்களையும் சந்திக்க வேண்டிய நபர்கள் பார்க்க வேண்டிய இடங்கள் அடைய வேண்டிய இலக்குகளையும் தினம்தோறும் எழுதுங்கள்.
இப்படி செய்து கொண்டு வாருங்கள் மிகமிக விரைவில் நீங்கள் அடைய வேண்டிய அனைத்தையும் அடைவீர்கள்.
*இது முற்றிலும் உண்மை...!*
*ஆனந்தமான வாழ்வுக்கு ஆழ்மனதின் அற்புத சக்தி பற்றிய விழிப்புணர்வு அவசியம் என்பதை அனைவருக்கும் புரியவைத்து அகிலம் புகழும் பாரதத்தை உருவாக்குவோம்....*
வாழ்க🙌வளமுடன்
*அன்பே🔥சிவம்*
🌴🎋🌴🎋🌴🎋🌴🎋🌴🎋🌴🎋