Tuesday 19 June 2018

தூய மனதை பெற

**வலுவான தூய மனதைப் பெற  சில எளிமையான வழி முறைகள்.**

🍀ஒரு நெருங்கிய நண்பருக்கு எதிர்பாராமல் தொலைபேசியில் தொடர்பு கொண்டு உங்கள் உணர்வுகளைப் பரிமாறிக் கொள்ளுங்கள்.

🍀நல்ல புத்தகம் ஒன்றை எப்போதும் கைவசம் வைத்திருங்கள்.

🍀உங்களுக்குப் பிடித்த விளையாட்டில் ஈடுபடுங்கள். அல்லது நீண்ட தூரம் நடைப் பயிற்சி செய்யுங்கள்.

🍀 உங்களுக்குப் பிடித்த இசைக் கருவியை இயக்கிப் பாருங்கள்.
உங்களுடைய அறையெங்கும் மெல்லிய இசையை பரவச் செய்து ரசியுங்கள்.

🍀இதுவரைக்கும் போகாத ஒரு ஓட்டலுக்குச் சென்று உணவை ருசித்துச் சாப்பிடுங்கள்.

🍀கஷ்டப்படும் நண்பர் ஒருவருக்குக் கடிதம் எழுதுங்கள்.

🍀நோயுற்றிருக்கும் நண்பரை நேரில் சந்தித்து நலம் விசாரியுங்கள்.

🍀மூச்சுப் பயிற்சியை தொடர்ந்து செய்யுங்கள்.

🍀உங்களுக்குக் கிடைத்த புகழ் மாலைகளை நினைவுக்குக் கொண்டு வாருங்கள் அவற்றிற்கு நன்றி பகிருங்கள்

இந்தப் பயிற்சிகளெல்லாம்  மனச்சோர்வைப் போக்கி மனதை புதிய பாதையில் புத்துணர்வுடன் நடக்கச் செய்யும்.

திறந்த மனம்தான் வளர்ச்சியின் அறிகுறி.

மனதைத் திறங்கள். மகிழ்ச்சி பொங்கட்டும்.

வாழ்த்துக்கள்

Wednesday 13 June 2018

Thoughts

**எண்ணங்களே எதிர்காலம்**

உங்கள் செயல்களில் எல்லாம் வெற்றி தேவதை கை கோர்க்க வேண்டுமா ? சாதனைகளை நிகழ்த்த வேண்டுமா,?

நீங்க யாரிடமும் சென்று என் எதிர்காலம் எப்படி இருக்கும் என கேட்க வேண்டாம்.

உங்கள் எண்ணங்களே உங்கள் எதிர்காலம்.
நான் என்னவாக ஆக வேண்டும் என நீங்கள் விரும்புகிறீர்களோ அவ்வண்ணமே ஆக முடியும். எண்ணிய முடிதல் வேண்டும்.. நல்லவே எண்ணல் வேண்டும்.

நம் எல்லாரின் தலை மீதும் தேவதைகள் உலா வந்து சுற்றிக் கொண்டிருக்குமாம்.. நாம் என்ன நினைக்கிறோமோ அல்லது சொல்கிறோமோ அப்போதெல்லாம் ததாஸ்து என சொல்லுமாம். ததாஸ்து என்றால் அப்படியே ஆகட்டும் என அர்த்தமாம். எனவே நல்லதையே சிந்தி. நல்லதையே சொல் . நல்லதையே செய்..

WORDS, THOUGHTS AND DEEDS எல்லாம் ஒருங்கிணைந்து செயலாற்றும்போது  நினைத்ததை செய்ய வழிமுறை பிறக்கும். செய்யும் ஆற்றல் பிறக்கும். அதற்கு அனைவரும் துணைபுரிவார்கள். அந்தச் செயல் இலகுவாய் நிறைவேறும்.

நான் யார் என்ற தேடல், இப்போது என்னால் என்ன செய்ய முடியும், நான் என்னவாக ஆக நினைக்கிறேன் அதற்கு என்னென்ன வழிகள் மேற்கொள்ள வேண்டும் என்ற தெளிவு வேண்டும்.

ஒரு தொழிலதிபரோ, அரசியல்வாதியோ, ஸ்டேட் பர்ஸ்ட் வாங்கும் மாணவனோ, திடீரென வந்து விட முடியாது.

எதற்கும் திட்டமிடலும், முறையான பயிற்சியும், இடைவிடாத முயற்சியும் வேண்டும்.

தாழ்வு மனப்பான்மையோ உயர்வு மனப்ப்பான்மையோ கூடாது. நம்மால் என்னவெல்லாம் செய்ய முடியும் என்ற தேடல் இருந்து கொண்டே இருக்க வேண்டும். அதற்கு தக்க நபர்களையும், நிகழ்வுகளையும் மனம் கண்டுபிடிக்கும்.

நேர்மறை சிந்தனை எல்லா நல்லவைகளையும் கண்டுபிடிக்கும். இது தெய்வத்திற்கு ஒப்பானது.

எதிர்மறை சிந்தனை அனைத்து அழிவுகளையும் கொண்டுவரும். இது சாத்தானுக்கு ஒப்பானது. அழிவு சக்தியை விடுத்து ஆக்க சக்தியை மட்டும் பயன்படுத்த மனதைப் பண்படுத்துதல் முக்கியம்

. நம் ஒவ்வொருவரைச் சுற்றியும் ஓரா (AURA) என்ற ஒரு ஒளிவட்டம் உண்டு. அந்த ஒளிச் சக்தி டிஸ்டர்ப் ஆகும்போது நோய் நம்மைப் பீடிக்கிறது. ஆரோக்கியமான சிந்தனையும், ஆரோக்கியமான உணவும் மனிதனை நோயிலிருந்து காப்பாற்றுகிறது.

இந்த ஆரோக்கியமான சிந்தனைகளை நாம் பெற முதலில் நல்ல புத்தகங்கள், பின் நல்ல உணவு. நல்ல பழக்க வழக்கங்கள் பின் யோகா தியானம் போன்றவை உதவுகின்றன.

எண்ணங்களை ஒழுங்கு படுத்துதல் ஓரிடத்தில் குவித்தல், மையத்திலிருந்து விலகாமல் நமக்கு வேண்டியவற்றை நியாயமான முறையில் பெற சிந்தித்தல் போன்றவை நேர்மறை சிந்தனையின் பயிற்சிகளாகும். இவ்வாறு குவிக்கப்பட்ட எண்ணமானது நம் உள் மன ஆசைகளை அலசி ஆராய்ந்து அதை செயல்படுத்தும் வழிமுறைகளைக் கண்டுணருகிறது.

விடாமுயற்சியோடு போராடுபவன் நீரில் விழுந்து நீச்சல் கற்றுக் கொள்வதுபோல கற்பிக்கிறது. ஜெயிப்பது என்பதன் பலபடிகளைக் கடந்து ஜெயித்தபின் அந்த அனுபவமே தெய்வமாகிறது.

இமயமலையில் ஏற வேண்டுமானாலும் சரி, ஏரோப்ளேன் ஓட்ட வேண்டுமானாலும் சரி, நம்மால் முடியும் என்பதை முதலில் நம்புங்கள். நம்பியவற்றை செயல்படுத்த நேர்மறை எண்ணங்களின் உதவியை நாடுங்கள். எண்ணம் போல வாழ்வு என்ற சொல்லுக்கு ஏற்ப எவ்வளவு உயரம் எட்ட விரும்புகிறீர்களோ அந்த உயரத்தை உங்களால் சுலபமாக எட்ட முடியும்.

நேர்மையான முறையிலேயே.. இதுதான் முக்கிய தாரக மந்திரமாகக் கொள்ளுங்கள். வெற்றி நிச்சயம். எப்போதும் ஜெயிப்போம் என்றே நினைத்து ஈடுபடுங்கள். ஜெயிப்பீர்கள்.

Sunday 10 June 2018

மனதின் மாற்றம்

லேசாகனும் மனசு லேசானும், ஆமா நம்ம மனசு எந்த விதமான அழுத்தமும் இல்லாமல் லேசாகனும்.அப்படி லேசாக லேசாக உங்கள் எண்ணங்கள் வலிமை மிகுந்த ஒன்றாக உங்க விருப்பங்களை நிறைவேற்றும் தளமாக அமையும்.அப்படி மனசு லேசாக என்ன செய்ய வேண்டும் என்றால் மனதில் உள்ள குறைகள் அனைத்தையும் ஒரு காகித்த்தில் எழுதி அதை தீயிட்டு பொசுக்கி விடவும். இது உங்களை மனதளவில் ஒரு  சுமையை இறக்கி வைத்த உணர்வை முதலில் தரும்.இந்த உணர்வின் தொடராக உங்களுக்கு பிடித்தமான ஒரு செயலை செய்யுங்கள் அது உங்கள் மனதை மேலும் மகிழ்ச்சியான ஒரு சூழலுக்கு கொண்டு செல்லும்.தனிமையை தவிருங்கள் , கண் மூடி சில நிமிடங்கள் அமைதி காணுங்கள்  இதை திரும்ப திரும்ப செய்து வாருங்கள் மனம் லேசாக லேசாக உங்கள் குறைகளை பற்றி எந்த சிந்தனையும் வரவைக்காதீர்கள் அதற்கு பதில் " எனது நியாயமான ஆசைகள், நிறைவோடும்,பரிபூரணத்தோடும், நடத்தியும் கடத்தியும்,தந்து கொண்டு இருக்கும் பிரபஞ்ச பேராற்றலே,படைத்தலின்  மூலவனே,நன்றி நன்றி " என சொல்லி பிரார்த்தனை செய்யுங்கள்.
கடமைக்காக அல்ல , காலத்தின் கட்டாயத்தில் தன்னம்பிக்கையோடு ,முழுநேசத்தோடு,எந்த விதமான சந்தேகமும் இன்றி முழுஈடுபாடோடு செய்து வாருங்கள். உங்கள் வாழ்க்கையில் ஒரு புதிய மாற்றத்தை விரைவில் காண்பீர்கள்..

கோபம்

*நாம் ஏன் கோபத்தில் சத்தம் போடனும் கோபம் வந்தா என்ன செய்வோம்?*


_யார்மேல நமக்கு கோபமோ, அவங்ககிட்ட சத்தம்போட்டு சண்டைபிடிப்போம்!! இல்லையென்றால் பேசாம அமைதியா இருந்துடுவோம்!_

ஆனா, எப்பவாவது யோசிச்சிருக்கோமா? யார்மேல நமக்கு கோபம் வந்தாலும் அவர்கள் நமக்கு மிக அருகில்தானே இருக்காங்க!

எதுக்கு ஊருக்கே கேட்கிறமாதிரி சத்தம் போடனும்?

மெதுவா சொல்லவேண்டியதை சொன்னாலே அவங்களுக்கு கேட்குமே!

நானும் யோசிச்சதில்லைங்க!

ஆனா இந்த கதையைப் படித்தபிறகு??????

ஒரு துறவி கங்கையில் குளித்துவிட்டுக் கரையேறும் சமயம், அவ்விடத்தில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள், சத்தம் போட்டு ஒருவரை ஒருவர் திட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

அதைப் பார்த்த துறவி, தன் சீடர்களிடம் திரும்பி சிரித்துக்கொண்டே கேட்கிறார்?

ஏன் மனிதர்கள் கோபத்தில் இருக்கும்போது ஒருவரை ஒருவர் பார்த்து சத்தம்போட்டு சண்டை பிடிக்கிறார்கள்?

சீடர்கள் சில நிமிடங்கள் சிந்திக்கிறார்கள்.....பின்னர்..

சீடர்களில் ஒருவர்: கோபத்தில் நாம் அமைதியை இழக்கிறோம்!

அதனால் சத்தமிடுகிறோம்!

துறவி: ஆனால், உனக்கு மிக சமீபத்தில் இருக்கும் நபரிடம், ஏன் சத்தமிடுகிறாய்?

அவர்கள் உன்னருகில்தானே நிற்கிறார்கள்!

நீ சொல்ல வேண்டியதை அவர்களுக்கு மட்டும் கேட்கும் விதமாக எடுத்துறைக்கலாமே!

ஒவ்வொரு சீடரும் ஒரு காரணம் சொல்கிறார்......

ஆனால் எந்த காரணத்திலும் அடுத்தவர்களுக்கு உடன்பாடில்லை!

கடைசியாக துறவி பதில் கூறுகிறார்.....

எப்பொழுது இரு மனிதர்கள், ஒருவர் மீது ஒருவர் கோபம் கொள்கிறார்களோ, அப்பொழுது அவர்களின் மனது இரண்டும் வெகு தொலைவுக்குச் சென்றுவிடுகிறது! எனவே தூரத்தில் இருக்கும் மனதுக்கு கேட்க வேண்டும் என்பதற்காகவே, சத்தமிடுகிறார்கள்!

மனது எவ்வளவு தூரம் விலகி இருக்கிறதோ, அவ்வளவு தூரம் இவர்கள் தங்கள் ஆற்றலை உபயோகித்து சத்தம்போட வேண்டியிருக்கும்!

அப்பொழுது தானே தங்கள் கருத்து வெகு தொலைவில் இருக்கும் மனதைச் சென்றடையும்!

ஆனால் இதுவே, இரு மனிதர்கள் ஒருவர் மீது ஒருவர் அன்பாக இருக்கும்போது என்ன நடக்கிறது?

அவர்கள் ஒருவரைப் பார்த்து ஒருவர் சத்தமிடுவதில்லை! அமைதியாகவும், அன்பான முறையிலும் தங்கள் கருத்துகளை வெளிப்படுத்துவார்கள்!

காரணம் அவர்களின் மனது இரண்டும் வெகு சமீபத்திலே இருக்கும்!

மனதிற்கு இடையேயான தூரம், மிகக் குறைவாக இருக்கும் அல்லது மனதிரண்டும் ஒன்றோடு ஒன்று இணைந்தே இருக்கும்!

துறவி தொடர்ந்து கூறுகிறார்...

இதைவிடவும் அதிகமாக ஒருவர் மீது ஒருவர் அன்பு செலுத்தும்போது என்ன நடக்கும்?

அவர்கள் ஒருவருக்கொருவர் சத்தமாக பேச தேவையிருக்காது! அவர்களின் மனதுகள் இரண்டும் கிசுகிசுப்பாக பேசுவதில் இருந்தே, அவர்களின் கருத்துகள் பரிமாறப்படும்!

இன்னும் இன்னும் அன்பு அதிகமாகும்போது வார்த்தையே தேவைப்படாது!

அவர்கள் கண்கள் ஒருவரை ஒருவர் பார்க்கும்போதே, மனதின் எண்ணங்கள் வெளிப்பட்டுவிடும்!

துறவி கடைசியாக சீடர்களைப் பார்த்து கூறுகிறார்,
அதனால் நீங்கள் ஒருவருடன் ஒருவர் வாதிடும்போது,

*"உங்கள் மனதுகள் இரண்டும் தொலைவாகப் போய்விடாமல் பார்த்துக்கொள்ளுங்கள்!*

*மனதின் தொலைவை அதிகப்படுத்தும் வார்த்தைகளைஉபயோகப்படுத்தாதீர்கள்!"*

*அப்படி செய்யாமல் போனால், "ஒருநாள் உங்கள் மனங்களிரண்டின் தூரம் கொஞ்சம் கொஞ்சமாக அதிகமாகி, கடைசியில் ஒன்றுசேரும் பாதையே அடைக்கப்பட்டுவிடும் நிலை வந்துவிடும்!"".*


*_"வாழ்க வளமுடன்"_*

படித்ததில் புரிந்தது..👏🏻👏🏻👍🏻👍🏻

நன்று நன்றி...

Friday 8 June 2018

எதிர்பார்பு

மற்றவர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றிக்
கொண்டிருப்பதை நிறுத்துங்கள். 

மற்றவர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றிக் கொண்டிருப்பதை நிறுத்துங்கள்.

நீ இங்கே யாருடைய எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்வதற்குப் பிறக்கவில்லை.

யாருடைய எதிர்ப்பார்ப்புக்கும் நீ பலி ஆகாதே.

அதே சமயம் உன் எதிர்பார்ப்பிற்கு எவரையும் பலியாக்காதே.

இதைத்தான் நான் தனித்தன்மை என்கிறேன்.

உன் தனித்தன்மையை மதி.

பிறர் தனித்தன்மையையும் மதி.

எப்போதும் எவரையும் உன் தனிப்பட்ட வாழ்வில் குறுக்கிட அனுமதியாதே.

அதே போல் எவருடைய தனிப்பட்ட வாழ்விலும் நீ குறுக்கிடாதே.

அப்போதுதான் நீ ஒரு நாள் ஆன்மிகத்தில் மலரமுடியும்.

மாறாக 99 சதவீத மக்கள் வெறுமே தற்கொலை செய்து கொண்டே இருக்கிறார்கள்.
அவர்களுடைய மொத்த வாழ்வும் மிக மெதுவான தற்கொலையே தவிர வேறில்லை.

மற்றவர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றிக் கொண்டே இருப்பது.....

சில நாட்கள் அப்பாவின் எதிர்பார்ப்பு, சில நாட்கள் அம்மாவின் எதிர்பார்ப்பு,

ஒரு நாள் மனைவி, மற்றொரு நாள் கணவன், குழந்தைகள்---அவர்களும் எதிர்பார்க்கிறார்கள்.

பின் சமூகத்தின் எதிர்பார்ப்பு, அரசியல்வாதிகளின் எதிர்பார்ப்பு,
மத குருமார்களின் எதிர்பார்ப்பு. சுற்றிலும் யாவரும் எதிர்பார்ப்புடனேயே உள்ளனர்.

நீயோ பாவம் எளிய மனிதன்! மொத்த உலகமும் உன்னிடம் இதை செய் அதை செய் என்று எதிர்பார்க்கிறது.

உன்னால் அனைவரின் அனைத்து எதிர்பார்ப்பையும் நிறைவேற்றவே முடியாது.

அனைவரும் உன்னிடம் கோரும் எதிர்பார்ப்புகளை பார்த்து நீ பைத்தியம் அடைந்து விட்டாய்.

உன்னால் யாருடைய எதிர்பார்ப்பையும் முழுதாக நிறைவேற்றவே முடிவதில்லை.

யாருமே திருப்தி அடைவதேயில்லை. யாருமே திருப்தி அடையாததால் நீ வீணானவன்; தோற்றவன்.

தனக்குள் திருப்தியாக மகிழ்ச்சியாக இருக்க இயலாதவர்களால் மகிழ்ச்சியாக சந்தோசமாக இருக்க முடிவதேயில்லை.

எதை நீ செய்தாலும் மற்றவர்கள் உன்னுடன் திருப்தியடையாமல் இருப்பதற்கு வழி காண்பார்கள்.

ஏனென்றால் அவர்களால் திருப்தி அடைய முடியாது. சந்தோசமாக இருக்க முடியாது.

*மகிழ்ச்சி, திருப்தி என்பது ஒரு கலை. அதை ஒருவன் கற்றுக் கொள்ள வேண்டும்.*

நீ எதை செய்கிறாய் எதை செய்யவில்லை என்பதை பொருத்தது அல்ல அது.

மற்றவர்களை மகிழ்விப்பதை விட நீ மகிழ்ச்சியாக இருக்கும் கலையை கற்றுக் கொள்.

Osho, The Discipline of the Transcendence, Vol. 1, Talk #2

Saturday 2 June 2018

செல்வம்

உள்ளே நீங்கள் அசிங்கமாகவும் அருவருப்பாகவும் உங்களை நீங்கள் உணர்வதால்தான் வெளியே ஒப்பனைகளும்,ஆடைகளும்,அணிகலன்களையும் அணிகிறீர்கள்.

உண்மையான செல்வந்தன் தன்னை பணக்காரனாக காட்டிக்கொள்ள தேவையில்லை.

ஹென்றி ஒரு மிகப்பெரிய பணக்காரர்.அவர் ஒரு ஊருக்கு சென்று இரவு தங்குவதற்கு வாடகை குறைவான அறை வேண்டுமென கேட்டார்.

விடுதி உரிமையாளர் கேட்டார் உங்கள் மகன் வரும்பொழுதெல்லாம் விலை உயர்ந்த அறை கேட்பார்.விலை உயர்ந்த உடைகள்தான் உடுத்துவார்.ஆனால் நீங்கள் மிக மோசமான சட்டை அணிந்து கானப்படுவது வினோதமாக உள்ளதே.

அதற்கு ஹென்றி சொன்னார்.என் மகன் பணக்காரன் கிடையாது.அவனை யாருக்கும் என்னுடைய மகன் என்று தெரியாததால் தான் ஒரு ஏழை அல்ல தான் ஒரு பணக்காரன் என்று நிரூபிக்கவேண்டியுள்ளது.ஆனால் எனக்கு அப்படி அல்ல நான் எப்படி இருந்தாலும் நான் பணக்காரந்தான்.

அழுக்கு சட்டை போட்டிருப்பதால் நான் ஏழை ஆகிவிடமுடியாது.எனக்கு தெரியும் நான் பணக்காரன் என்று.பிறகு ஏன் அதை அடுத்தவருக்கு நிரூபிக்க முயற்சி செய்யவேண்டும்.

இதுதான் உண்மையான பணக்கார தண்மை.நீங்கள் உள்ளே செல்வந்தர் ஆகிவிட்டால் வெளியில் யாருக்கும் உங்கள் உண்மை தண்மையை நிரூபிக்கவேண்டிய அவசியமில்லை.

அடுத்தவனுக்கு பயந்தவன் தான் தன்னை பார்த்தால் அடுத்தவன் பயம் கொள்ளவேண்டும் என்று நினைக்கிறான்.

உள்ளே நீங்கள் அசிங்கமாகவும் அருவருப்பாகவும் உங்களை நீங்கள் உணர்வதால்தான் வெளியே ஒப்பனைகளும்,ஆடைகளும்,அணிகலன்களையும் அணிகிறீர்கள்.

ஒரு உண்மையான மனிதன் செல்வத்தை தேடி ஓடுவதில்லை.அதே நேரம் தன்னுடைய வறுமையை உயர்வாகவும் நினைப்பதில்லை.

வறுமையை நேசித்தால் செல்வத்தை வெறுப்பதாக பொருள்.செல்வத்தை நேசித்தால் வறுமையை வெறுப்பதாக பொருள்.

ஆனால் உண்மையான மனிதன் எதையும் வெறுக்கவும் மாட்டான்,நேசிக்கவும் மாட்டான்.

ஒரு புதிய பணக்காரன் புதிதாக ஒரு வீடு கட்டியிருந்தான்.அதில் மூன்று நீச்சல் குளங்கள் இருந்தது.இரண்டில் நீர் இருந்தது.ஒன்று மட்டும் வெறுமையாக இருந்தது.

அவன் நன்பன் கேட்டான்.... எதற்கு மூன்று?

பணக்காரன் சொன்னான், முதலாவது வெண்ணீர் குளியலுக்கு.இரண்டாவது குளிர் நீருக்கு.மூன்றாவது நீச்சல் தெரியாதவர்களுக்கு.

இன்றவன்

உலகம் ஒரு தோட்டம்!  அதற்கு முதலாளி                 இறைவன்!!
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷

    ஒரு பணக்காரனுக்கு தோட்டம் இருந்தது.அதில் இரண்டு தோட்டக்காரர்கள் இருந்தார்கள்.ஒருவன் சோம்பேறி.ஆனால் எஜமானன் தோட்டத்திற்கு வந்தால் போதும்,உடனே எழுந்து போய் கூப்பிய கைகளுடன் அவரிடம்,"ஓ,என் எஜமானனின் முகம் எவ்வளவு அழகாக இருக்கிறது"என்று புகழ் பாடி நிற்பான்.மற்றவன் அதிகம் பேசுவதே இல்லை,ஆனால் கடினமாக உழைப்பான்.பல வகையான பழங்களையும்,காய்கறிகளையும் சாகுபடி செய்து தொலைவிலிருக்கும் தன் எஜமானனின் வீட்டிற்கு சுமந்து சென்று கொடுப்பான்.இந்த இரண்டு தோட்டக்காரர்களுள் யாரை அந்த எஜமானன் அதிகம் விரும்புவான்?.

இந்த உதாரணத்தைக்கூறி சுவாமி விவேகானந்தர் விளக்குகிறார்: "இறைவன்தான் அந்த எஜமானன்.இஇந்த உலகம்தான் அவரது தோட்டம்.இங்கே இரண்டு வகையான தோட்டக்காரர்கள்,அதாவது மக்கள் இருக்கிறார்கள்.ஒரு வகையினர் சோம்பேறிகள்,ஏமாற்றுக்காரர்கள்; இறைனின் அழகான கண்களையும்,மூக்கையும்,மற்ற குணநலன்களையும் பற்றி வெறுமனே பேசிக்கொண்டிருப்பார்கள்.மற்றொரு வகையினர்,ஏழை,பலவீனர்களான எல்லா மனிதர்களையும்,விலங்குககள் மற்றும் அவரது படைப்புகள் அனைத்தையும் மிகுந்த கவனத்தோடு பராமரிப்பவர்கள்.

   இவர்களுள் யார் இறைவனின் அன்பிற்கு உ ரியவர்கள்?நிச்சயமாக அவரது குழந்தைகளாகிய மக்களுக்கு சேவை செய்பவர்களே.

   இறைவனுக்கு சேவை செய்ய விரும்புபவர்கள் அவரது குழந்தைகளாகிய இந்த உலக உயிர்கள் அனைத்திற்கும் முதலில் சேவை செய்ய வேண்டும். இறைவனின் தொண்டர்களுக்கு சேவை செய்பவர்களே அவரது மிக சிறந்த தொதத்டர்கள் என சாஸ்திரங்களிலும் கூறப்பட்டுள்ளது.

   இக்கருத்தை மனதில் கொள்ளுங்கள். மீண்டும் சொல்கிறேன்.மனத்தூய்மையுடன் இருங்கள்.உங்களை நாடிவரும் ஏழைகளுக்கு உங்களால் இயன்ற உதவிகளைச் செய்யுங்கள்.இதுவே நற்கருமம்.இதன் பயனாக உங்ஙகள் இதயம் தூய்மை பெறும்.அப்போது இறைவன் வெளிப்பட்டு தோன்றுவார்.அவர் எல்லோரது இதயத்திலும் எப்போதும் இருக்கிறார்.

   அழுக்கும்,தூசியும் படிந்த கண்ணாடியில் நம் உருவத்தை பார்க்க முடியாது.அறியாமையும்,தீய குணங்களுமே நம் இதயக்கண்ணாடியில் படிந்துள்ள அழுக்கும்,தூசியும் ஆகும். நம் நன்மையை மட்டுமே நினைக்கின்ற சுயநலம்,பாவங்கள் அனைத்திலும் முதற்பாவமாகும்.சுயநலமற்ற தன்மையே மதத்திற்கான உரைகல்.சுயநலமில்லாதவனே மேலான ஆன்மீகவாதி.அவனே இறைவனுக்கு அருகில் இருக்கின்றான்.