Monday 14 June 2021

எஜமானர்

 
உங்கள் வாழ்க்கையின் எஜமானர் யார்❓❓

இந்த வாழ்கை எவ்வளவு வித்தியாசமானது. ஒவ்வொரு நாளும் எதாவது ஒரு விசயத்தை நமக்குச் சொல்லிக் கொடுத்துக்கிட்டே தான் இருக்கு. வாழ்க்கை என்பது எப்போதும் சந்தோசம் நெறஞ்சது இல்லை, இன்பமும், துன்பமும் கலந்து இருப்பது தான் வாழ்க்கை. 

ஒரு விசயத்தை நாம தெளிவா புரிஞ்சுக்கணும், நம்ம வாழ்க்கையில் நடக்கிறது எல்லாமே ஒரு நிகழ்வுகள் தான், அது சந்தோசமா இல்லை கஷ்டமானதா என்பது நம்மளும் நம்மளைச் சுற்றி இருக்கிறவங்களும் ஏற்படுத்துற ஒரு தோற்றம்.

உங்க வீட்டிலேயோ இல்லை பக்கத்து வீட்டிலேயோ சின்ன பையனோ பொண்ணோ இருந்தா ஒரு அரை மணி நேரம் அமைதியாக உட்கார்ந்து அந்த பையன் என்ன என்ன பண்ணிட்டு இருக்கான்னு பாருங்க. விளையாடுவான், கீழ விழுவான் அப்புறம் அவனே எழுந்திருச்சிடுவான், அடுத்த வேலையைப் பார்க்கப் போயிடுவான்.

எதாவது ஒரு நிகழ்ச்சியை நினைத்து அவனே சிரிச்சுக்குவான், எத்தனை முறை விழுந்தாலும் சாதாரணமா எழுந்து போயிடுவான். எந்த நேரமும் துறு துறுன்னு எதாவது ஒரு வேலையைப் பார்த்துக்கிட்டே இருப்பாங்க, ரொம்ப ஆச்சரியமான விசயமாக இருக்கும் . #மகரயாழ் எப்படி இந்த சின்ன பசங்களாலே ஏதாவது ஒரு வேலையை பண்ணிக்கிட்டே இருக்க முடியுது.

கீழே விழுவதும் பின்னர் எழுவதும் ஒரு சாதாரண நிகழ்வுதான், நீங்களும் நானும் ஒவ்வொரு மனிதரும் கீழே விழுந்து பின்னர் எழுந்திரிக்கிறோம் . ஆனால் , பெரியவர்கள் ஆன பின்பு பின்னர் ஒரு சின்ன தோல்வியை நம்மால் தாங்க முடியவில்லை .சின்ன தோல்வியிலே இருந்து எழுந்திருக்க முடியாம அழுது புலம்பிக்கிட்டு இருக்கோம்.

குழந்தைகளுக்குத் தோல்வியைப்பற்றி சொல்லி கொடுங்க, வாழ்க்கையிலே ஜெயிக்கிறது எப்படியோ, அப்படித்தான் தோல்வியை சந்திக்கிறதும். வெற்றியோ தோல்வியோ அது ஒரு சாதாரண நிகழ்வுகள் என்று சொல்லிக் கொடுங்க.

எந்த ஒரு தோல்வியிலே இருந்தும் உங்களால் மீண்டு வர முடியும், உங்க மனசுக்குச் சொல்லுங்க இது ஒரு சாதாரண நிகழ்வுதான் , என்னாலே மீண்டும் மீண்டும் எழுந்து வெற்றியை அடைய முடியும். நீங்க மனசு வச்சா உங்களாலே முடியும், 

ஏன்னா இது உங்க வாழ்க்கை, "நீங்க தான் உங்க வாழ்க்கையுடைய எஜமான்".*